டெல்லி: இந்தியாவில் காசோலை மோசடி வழக்குகளின் எண்ணிக்கை பல லட்சமாக உயர்ந்துள்ள நிலையில் இப்பிரச்சனைகளை களையவும், எதிர்வரும் வழக்குகளையும் எளிமையாகக் கையாளவும் மத்திய அரசு காசோலை மோசடி அவசர சட்ட மசோதாவை இரண்டாவது முறையாகப் பிறப்பிக்கப்பட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் படி தனிநபர் அல்லது நிறுவனங்கள் பணப் பரிமாற்றத்திற்காகக் காசோலை சமர்ப்பிக்கும் இடத்திலேயே வழக்கைப் பதிவு செய்துகொள்ளலாம்.
வழக்கு..
உதாரணமாக விக்னேஷ் என்பவர் சேலம் வங்கியில் தனது கணக்கை வைத்துக்கொண்டு சென்னையில் உள்ள நிறுவனத்திற்குக் காசோலை அனுப்பியுள்ளார் என வைத்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் நிறுவனம், வங்கியில் சமர்ப்பிக்கும்போது விக்னேஷ் கணக்கில் பணம் இல்லை என்றால் நிறுவனம் விக்னேஷ் மீது சென்னையிலேயே வழக்குத் தொடரலாம்.
மறுப்பு..
இந்த மசோதாவைக் கடந்த மே மாதத்திலேயே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது ராஜ்ய சபா இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. தற்போது இரு அவைகளும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் காசோலை வழங்கிய பகுதியில் வழக்குத் தொடர்வதற்குப் பதிலாக அதைப் பெறும் பகுதியில் வழக்கு தொடர வழியேற்பட்டுள்ளது.
பிரணாப் முகர்ஜி
கடந்த மூன்று மாதங்களில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பிக்கும் 2-வது அவசர சட்டம் இதுவாகும். மாற்றுமுறை ஆவணச் சட்டம் 2015-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
18 லட்சம் வழக்குகள்
நாட்டில் காசோலை மோசடி வழக்கு தொடர்பாகச் சுமார் 18 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பிரச்சனைகளுக்குத் தீர்வு...
இதனால் நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குப் பயணம் செய்ய வேண்டியுள்ளது. நேர விரயம், பண விரயம் ஆகிய இரண்டையும் தவிர் கும் வகையில் இந்த அவசர சட்டம் அமைந்துள்ளது.
IFSC மற்றும் MICR குறியீடு
வங்கி IFSC மற்றும் MICR குறியீடுகளை தேடுவதில் குழப்பமா?? கவலை வேண்டும் இதை மட்டும் கிளிக் பண்ணுங்கள்