மும்பை: ஐரோப்பிய சந்தை மற்றும் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் காரணமாக மும்பை பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சுமார் 777 புள்ளிகள் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள்
டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
நேற்றைய வர்த்தகத்தில் எஃப்எம்சிஜி துறையில் ஐடிசி நிறுவனப் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 10 சதவீதம் வரை உயர்ந்து மும்பை பங்குச்சந்தையின் மதிப்புத்தக்க நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ், எச்டிஎப்சி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஐடிசி நிறுவனப் பங்குகள்
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் ஐடிசி நிறுவனப் பங்குகள் 9.91 சதவீத உயர்வில் 325.10 புள்ளிகளை எட்டியது. ஆனால் நேற்று அதிகப்படியாக 10.54 சதவீத உயர்வில் 327 ரூபாய் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
3வது இடம்
ஐடிசி நிறுவனத்தின் திடீர் உயர்வினால் சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியில் மதிப்புதக்க நிறுவனங்கள் வரிசையில் இந்நிறுவனம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
தற்போதைய நிலையில் ஐடிசி நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு 2,61,403.46 கோடி ரூபாய்.
டாப் 5 நிறுவனங்கள்
ஐடிசி நிறுவனம் 3வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், முதல் இடத்தில் டிசிஎஸ், 2வது இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 4வது இடத்தில் இன்போசிஸ், 5வது இடத்தில் எச்டிஎப்சி வங்கி ஆகியவை இடம் பெற்றுள்ளது.
புகையிலை வரி
ஐடிசி நிறுவனத்தின் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் லாபம் அடைவது இந்நிறுவனத்தின் சிகரெட் விற்பனை தான். திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் பீடி அல்லாத பிற புகையிலை பொருட்களின் மீதான கலால் வரியை 10-15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.