மும்பை: 2016ஆம் நிதியாண்டின் கடைசி நாளை எட்டிய நிலையில் இன்று ரிசர்வ் வங்கி வருமான வரி செலுத்துவோர் தங்களது வரிப் பணத்தைச் செலுத்த ஏதுவாக அனைத்து வங்கி கிளைகளும் இரவு 8.00 மணி வரையில் முழுமையாக இயங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மின்னணு பரிமாற்றம் வழக்கம் போல் இரவு 12 மணி வரையில் செயல்படும் எனவும் ஆர்பிஐ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தனிக் கவுன்டர்
இந்தியாவில் அரசுப் பணிகளைச் செய்யும் முக்கியமான வங்கி கிளைகளில் வரி செலுத்துவோருக்கான தனிக் கவுன்டர் அமைக்கப்பட்டு வருமான வரி செயல்பாடுகளை வங்கி கிளைகள் செய்து வருகிறது.
வைப்பு நிதி
சமீபத்தில் நிதியமைச்சகத்தின் ஒப்புதல் உடன் வருமான வரித்துறை வங்கி வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வருமான தகவல்களை மறைத்தவர்களை மீண்டும் வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்ய எச்சரித்துள்ளது.
வருமான வரி தாக்கல்
இதனால் முன்கூடியே வருமான வரி தாக்கல் செய்த சிலர் வைப்பு நிதியில் மூலம் கிடைக்கும் வருமான தகவல்களுடன் மீண்டும் வருமான வரியைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
கால நீட்டிப்பு
மேலும் வருமான வரி தாக்கல் செய்ய வருமான வரித்துறை இந்த வருடமும் கால நீட்டிப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தபால் நிலையங்கள்
அதுமட்டும் அல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வதற்காகத் தபால் நிலையங்களும் இன்று 8.00 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி
30 வயசாகிடுச..." data-gal-src="http:///img/600x100/2016/03/31-1459404832-2young-businessman-using-a-tablet.jpg">30 வயசாகிடுச்சா..?
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..