பெங்களூரு: ஸ்டார்ட் அப், மென்பொருள் நிறுவனங்கள் மந்தமான வளர்ச்சி மற்றும் முதலீட்டு அளவு சரிவுகளால் இந்திய நிறுவனங்களில் அனுபவம் அதிகத் தேவைப்படும் பணியிடங்களில், வெறும் செலவை குறைப்பிற்காக வெகு சில வருடங்கள் அனுபவம் கொண்ட ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.
இதனால் இந்திய நிறுவனங்கள் சுமார் 10 சதவீதம் அளவிலான செலவை குறைக்க முடியும் என நிறுவனங்கள் நம்புகிறது.
இதனால் அதிகம் அனுபவம் உடைய ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டும், குறைவான சம்பளம் பெறும் சூழ்நிலையும் உருவாகும் எனத் திட்டவட்டமாகக் கூறுகின்றனர் மனிதவள துறை உயர் அதிகாரிகள்.
டெக் நிறுவனங்கள்
இந்தியாவில் இத்தகையைச் செயல்பாடு அனைத்துத் துறைகளில் இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் ஐடி மற்றும் டெக்னாலஜி சார்ந்த நிறுவனங்களில் நியமிக்கப்படும் அதிகளவிலான ஊழியர்கள் அனுபவம் குறைந்தவர்களே.
என்டரி லெவல் ஊழியர்கள்
இன்றைய நிலையில் நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் துவங்கி சிறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை 5-8 வருட அனுபவம் தேவைப்படும் பணியிடங்களில் வெறும் 1-3 வருடப் பணி அனுபவம் கொண்ட ஆட்களைப் பணியில் அமர்த்தப்படுகின்றனர் என நாட்டின் முன்னணி ஆட்சேர்ப்பு நிறுவனங்களான HIREE தெரிவித்துள்ளது.
15 சதவீதம் செலவு குறைப்பு
இத்தகைய நடைமுறையின் மூலம் ஐடி மற்றும் மென்பொருள் சார்ந்த நிறுவனங்கள் சுமார் 15 சதவீதம் அளவிலான செலவை குறைக்கின்றது. 1-3 வருடப் பணி அனுபவம் கொண்ட ஆட்களைப் பணியில் அமர்த்தினால் அனுபவம் நிறைந்த ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய சம்பள அதிகம்.
ஆட்சேர்ப்பு நிறுவனம்
கடந்த 3 மாத காலத்தில் இந்திய ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் செய்யப்பட்ட ஆய்வில், ஐடி முதல் உற்பத்தித் துறை வரை அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்களில் கடந்த 3 மாதத்தில் பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களில் 40-60 சதவீதம் பேர் 1-3 வருட அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வு இந்தியாவில் இருக்கும் சுமார் 6 லட்சம் நிறுவனங்களில் செய்யப்பட்டது.
முன்னணி ஐடி நிறுவனங்கள்
இந்நிலையின் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் பட்டதாரிகளையே அதிகளவில் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றது. இதனால் அனுபவம் நிறைந்த ஐடி ஊழியர்கள் 8 முதல் 10 வருடத்தில் இத்துறையில் இருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகி வருகிறது.
அனுபவம் நிறைந்த ஐடி ஊழியர்கள்
இப்படி ஐடி நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் பல அனுபவம் நிறைந்த ஐடி ஊழியர்கள் தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அல்லது வங்கி, விவசாயம் எனப் பிற துறைகளில் தங்களது பணியைச் செய்து வருகின்றனர்.
வர்த்தகம் பாதிப்பு
மேலும் இந்தியாவில் மென்பொருள் மற்றும் டெக் வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து சரிந்து வருவதாகவும், அதிகளவிலான ஐடி ஆர்டர்கள் பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கிறது.
ரெசிஷன்
இதனால் ஐடித்துறை மிகப்பெரிய பிரச்சனையைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. இதுமட்டும் இல்லாமல் இந்தச் சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்தச் சில வருடங்களில் மீண்டும் இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் ரெசிஷன் வரலாம் என அஞ்சப்படுகிறது.
பிஎப் பணம்
1,00,000 ஊழியர்கள் 'டா டா' 'பை பை'..!
பிபிஓ
ரொம்பவே மாறிபோசு
சிறு முத..." data-gal-src="http:///img/600x100/2016/04/15-1460723546-2businessresearch.jpg">8 ஐடியா..!
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..