இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏப்ரல் 1 முதல் புதிய தாராளமயமாக்கப்பட்ட விசா ஆட்சி சட்டம்.
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இ-விசா பெற்று வரும் சுற்றுலா பயணிகள் இனி இரண்டு மாதங்கள் வரை தங்கலாம் என்று இரட்டை அனுமதி வழங்கியுள்ளது. இதுவே மருத்து பரிசோதனைகளுக்காக வருபவர்கள் மூன்று மாதம் வரை தங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏப்ரல் 1 முதல் புதிய தாராளமயமாக்கப்பட்ட விசா ஆட்சி சட்டம் அமலுக்கு வந்துள்ளதாகவும் இதன் மூலம் இ-விசா பெற்று இந்தியா வரும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் இரண்டு மாதங்கள் வரை இங்குத் தங்கலாம் என்றும் தெரிவித்தார்.
இ-விசா பெற்று இந்தியா வரும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு 30 நாட்களில் இருந்து 60 நாட்களாகவும், இதுவே மருத்துவப் பரிசோதனைகளுக்காக இ-விசா பெற்று வருபவர்கள் 90 நாட்களும் இந்தியாவில் தங்கி இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
கூடுதலாக அண்டை நாடுகள் செல்ல வசதிகள்
இந்த இரட்டை நன்மைகளால் சுற்றுலா பயணிகள் அண்டை நாடுகளான பூட்டான் உள்ளிட்ட சில நாடுகளுக்கும் சென்று வர அனுமதி உண்டு.
தாராளமயமாக்கப்பட்ட விசா சட்டம் மூலமாகச் சுற்றுலா, வணிக உள்ளிட்ட பயணங்களுக்காக அதிகப் பயணிகள் இந்தியா வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இ-விசா வகைகள்
ஏப்ரல் 1 முதல் இ-சுற்றுலா விசா, இ-வணிகம் விசா, இ-மருத்துவம் விசா என்று மூன்று வகையாக இ-விசா பிரிக்கப்பட்டுள்ளது.
30 நாட்களில் இருந்து 120 நாட்கள் வரை விச்சாக்கலுக்கான நீட்டிப்பு அளிக்கப்பட்டது மட்டும் இல்லாமல் வணிகம் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு இ-விசா விண்ணப்பிப்பவர்களுக்கு வசரம் என்றால் 48 நாட்களில் விசா அளிக்கப்படும்.
கூடுதல் குடியேற்றம் கவுண்டர்கள்
மருத்துவப் பரிசோனைகளுக்காக வரும் வெளிநாடு பயணிகளுக்காக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 6 முக்கிய இந்திய விமான நிலையங்களில் கூடுதல் குடியேற்றம் கவுண்டர்கள் மற்றும் வசதி மேசைகள் அமைக்கப்படும்.
ஃபிளிம்(F) விசா, இண்டர்ன் விசா
இ-விசாவில் புதிதாக ஃபிளிம்(F) விசா என்ற ஒன்றும் ஒரு வருட நுழைவு அனுமதியுடன் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் இண்டர்ன்ஷிப் பணிகளுக்காக வருபவர்களுக்கு இண்டர்ன்(I) விசா ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இ-விசா சேவை 161 நாடுகளுக்கு வழங்கப்படும்
இந்தியாவிற்கு வருவதற்கான இ-விசாவை இனி 161 நாடுகளாக ஆதிகரிக்கப்படுவதாகவும், 24 விமான நிலையங்கள் மற்றும் கொச்சின், கோவா மற்றும் மங்களூரு உள்ளிட்ட மூன்று கடல் போர்ட்கள் மூலமாகவும் இந்தியா வர முடியும்.
ஐந்து வருட விசா
ஐந்து வருடங்களுக்குச் சுற்றுலா, வணிகம் போன்றவற்றுக்குச் சேர்த்து விசா பெறும் முறையும் கூடுதலாகப் பல நாடுகளுக்கு அளிக்கப்பட உள்ளது. இதற்காகப் பயோமெட்ரிக் சாதங்கள் மூலம் விண்ணப்பிக்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
மின்னஞ்சல் மூலம் விசா
இ-விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இனி அனுமதிகள் மின்னஞ்சல் மூலமாகவும் வழங்கப்படும் என்றும் அதை அச்சிட்டுக் கொண்டு இந்தியா வந்து செல்லாலாம் என்றும், இந்தியா வரும்போது குடியேற்றம் அதிகாரிகளிடம் முறையான அனுமதிகளையும் பெற வேண்டும்.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications