வருமான வரித்துறை விவசாயம் மூலமாக அதிகம் வருவாய் காட்டிய வரி தாக்கல் செய்யுனர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
விவசாயம் மூலம் அதிக வருவாய்ப் பெற்றுள்ளதாகக் கணக்கு காண்பித்துள்ள 700 தனிநபர்களுக்கு வருமான துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக நமக்குக் கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.
வருமான வரித்துறை அனுப்பிய நோட்டிஸ் முக்கியமாகத் தங்கலது முதன்மை வருமானத்தை விட அதிகமாக விவசாயம் மூலமாக வருவதாகக் காண்பித்திருப்பதே என்றும் கூறப்படுகின்றது.
இலக்கு
விவசாயம் செய்து 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளதாகக் கணக்கு காண்பித்துள்ள நபர்களுக்குத் தான் வருமான வரித் துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளதாம்.
மும்பை
மும்பையில் மட்டும் 100 நபர்களுக்கு விவசாயம் வழியாக வருமானம் அதிகமாகக் காண்பித்திருப்பதற்காக வருமான வரி நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காரணம்
இதில் என்ன ஆச்சர்யமான செய்தி என்றால் தங்களது முதன்மை வருவாயினை விட விவசாயம் மூலமாக இரண்டு மடங்கு அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளதாக அவர்கள் கணக்கு காண்பித்து இருப்பது ஆகும்.
முறைகேடாகப் பெற்ற வருவாய் எனச் சந்தேகம்
சிலருக்கு அதிகளவில் விவசாய நிலம் இல்லாத போதிலும் விவசாயத்தில் இருந்து அதிக வருவாய் ஈட்டியுள்ளதாகக் கணக்கு காண்பித்துள்ளனர் என்றும், கண்டிப்பாக இது அவர்கள் வேறு வழியில் பெற்று இருக்கக் கூடிய வருமானமாக இருக்கலாம் என்று வருமான வரித்துறை சந்தேகப்படுவதாக மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.
இந்தியாவில் வரி இல்லை
விவசாயம் மூலம் பெறுகின்ற வருவாய்க்கு இந்தியாவில் வருவாய் இல்லை என்பதினால் தான் மோசடியாக இவர்கள் கணக்கு காண்பித்து இருக்கக் கூடும் என்று கூறுகின்றனர்.
அரசுக்கு உள்நோக்கமும் இல்லை
அரசுக்கும், வருமான வரித் துறைக்கும் விவசாயிகள் மீது குற்றம் சாட்ட எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், வரி ஏய்ப்பு செய்வதற்காக விவசாயம் மூலம் பெற்ற வருவாயினை உயர்த்திக் காண்பிப்பது கண்டிக்கத்தக்கது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications