மத்திய பிரதேச காவல் துறையின் சைபர் செல் பிரிவு அன்மையில் இந்தியர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விவரங்கள், சிவிவி எண் மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்பதைக் கண்டு பிடித்துள்ளது.
வங்கி கணக்கு விவரங்களை இதுப்போன்று விற்கும் மோசடி கூட்டம் ஒன்று பாக்கிஸ்தானை சேர்ந்தது என்றும் லாகூரில் இருந்து இயங்கி வருகின்றது என்பதை இந்தூர் காவல் துறையினைக் கண்டறிந்துள்ளனர்.
வாடிக்கையாளராகப் புலன் விசாரணை அதிகாரி
இதற்காகப் புலன் விசாரணை அதிகாரி ஒருவரை வாடிக்கையாளர் போன்று நடிக்க வைத்து இந்தூரை சேர்ந்த ஒரு பெண்ணின் டெபிட் கார்டு விவரங்களைப் பிட் காயினில் முதலீடு செய்வதற்க எனப் பெற்றுள்ளார்.
மேலும் அப்போது இவருக்கு இவ்வரங்கள் அளித்த மும்பையினைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளதாகவும் இந்தூர் காவல் துறை தெரிவித்துள்ளது.
புகார்
மத்திய பிரதேசத்தில் வங்கி கிளை ஒன்றில் பணிபுரியும் நபர் ஒருவரின் கிரெடிட் கார்டில் இருந்து ஆகஸ்ட் 28-ம் தேதி 72,401 ரூபாய் மோசடியாக எடுத்துள்ளதாக வந்த புகாரினை அடுத்து சைபர் குற்றப்பிரிவு போலிசார் இதனைக் கண்டறிந்துள்ளனர்.
கைது
மும்பையினைச் சேர்ந்த ராஜ்குமார் பில்லை என்பவர் விமான டிக்கெர் பெறுவதற்காக இந்தக் கிரெடிட் கார்டினை பயன்படுத்திய வைத்துப் பிடிபட்டுள்ளார். மேலும் இவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் பில்லை காக்னிசென்ட் நிறுவனத்தில் முன்னால் ஊழியர் என்றும், இவரது மனைவி எச்டிஎப்சி வங்கி ஊழியர் என்றும் தெரியவந்துள்ளது.
ஓடிபி இல்லாத பரிவர்த்தனை
இந்த மோசடி கும்பல் ஓடிபி கேட்காத வெளிநாட்டு இணையதளங்களில் மட்டும் மட்டும் தங்களிடம் உள்ள பிற பயனர் வங்கி கணக்கு விவரங்களை வைத்து மோசடி செய்து வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.