கிரிப்டோகரன்சி, முதலீட்டுச் சந்தையில் கடந்த சில வருடங்களாகக் காந்தம் போல் முதலீட்டாளர்களை ஈர்த்து பெரிய அளவிலான லாபத்தை அளித்த ஒரு வரப்பிரசாதம்.
ஆனால் கடந்த ஒரு வாரத்தில் நிலைமை முழுமையாக மாற்றியுள்ளது. ஆம்.
லைட்காயின்
கிரிப்டோகரன்சி சந்தையில் பிட்காயின் போலப் பல காயின்கள் உள்ளது, இதில் முக்கியமான ஒன்று தான் லைட்காயின். கடந்த சில வாரங்களில் லைட்காயின் சுமார் 7,500 சதவீதம் சரிந்து இதன் முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியது.
மகாப்பிரபு..
இந்நிலையில் லைட்காயினை உருவாக்கிய சான் பிரான்சிஸ்கோ மென்பொருள் வல்லுனர் தன்னிடம் இருந்த மொத்த லைட்காயின் இருப்பையும் விற்றுவிட்டுப் பணத்தை நன்கொடை அளித்துள்ளார்.
அதிகப் பணம்
இதுநாள் வரையில் லைட்காயின் எனக்கு அதிகளவிலான பணத்தைக் கொடுத்தது, இந்நிலையில் என் சொத்துக்களைக் கட்டிவைக்க விரும்பவில்லை எனச் சார்லி லீ தெரிவித்துள்ளார்.
6 வருடம்
லைட்காயின் உருவாக்கிய வர்த்தகத்திற்கு வந்த 6 வருடத்தில் முதல் முறையாக என்னிடம் ஒரு லைட்காயின் கூட இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
விலை சரிவு
கடந்த ஒரு மணிநேரத்தில் லைட்காயின் மதிப்பு 23.12 சதவீதம் வரையில் சரிவை சந்தித்து 250.74 ரூபாயை அடைந்துள்ளது.
உண்மை
தனக்குப் போதிய பணம் கிடைத்துள்ளது என்று சார்லி லீ தெரிவித்துள்ள நிலையில், உண்மை பின்னணி இனி வரும் காலத்தில் கிரிப்ரோகரன்சி மதிப்புச் சந்தையில் குறைந்த தரையைத் தொடும். இதன் பின்பு மீண்டும் எழும் எனக் கருதப்படுவதால், மொத்த இருப்பையும் விற்பனை செய்துள்ளதாகத் தெரிகிறது.
சேச்சுரேஷன் பாயின்ட்
பொதுவாகத் தங்கம், கச்சா எண்ணெய், போன்ற காமாடிட்டியாகத் தான் கிரிப்டோகரன்சி பார்க்கப்படுகிறது. தற்போது இதன் விலை உச்சத்தை அடைந்து சரிவை நோக்கிப் பயணிக்கத் துவங்கியுள்ளது.
அடுத்தச் சில வாரங்களில் கூடுதல் சரிவைச் சந்திக்கும் இது, மீண்டும் உச்ச விலைநிலையை அடைய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.