1.77 பில்லியன் டாலர் மோசடி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.3,000 கோடி நட்டம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 1.77 பில்லியன் டாலர் மோசடி செய்துள்ள தகவல்கள் வெளியானதை அடுத்து பங்குகளின் விலை 7.8 சதவீதம் வரை சர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

பங்குகளின் மதிப்பு சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு 3,000 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள்

அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள்

மும்பையினைச் சேர்ந்த ஒரு பஞ்சாப் நேஷ்னல் வங்கி கிளையில் சில அங்கீகரிக்கப்படாதா பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பரிவர்த்தனைகள் தங்களுக்குத் தெரிந்த சில வாடிக்கையாளர்களுக்கு அட்வான்ஸ் ஆக வங்கி அதிகாரிகள் அளித்துள்ளனர் என்றும் மும்பை பங்கு சந்தைக்குத் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி குறிப்பிட்டுள்ளது.

 லாபம் சரிவு

லாபம் சரிவு

பிப்ரவரி 6ம் தேதி மூன்றாம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்ட பஞ்சாப் நேஷ்னல் வங்கி எதிர்பார்த்ததை விடக் குறைவான வருவாயினைப் பெற்றுள்ளதாகவும் அதே நேரம் சொத்து மதிப்புகள் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தது. நிகர லாபமானது 11.1 சதவீதம் உயர்ந்து 230 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வர்த்தகம்
 

வெளிநாட்டு வர்த்தகம்

சர்வதேச வணிகத்தில் இருந்து 2017 டிசம்பர் மாதம் 11 கோடியினைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மூன்றாம் காலாண்டில் வெளிநாட்டுக் கிளைகளில் 5.9 சதவீதம் டெபாசிட்கள் அதிகரித்து 6.48 லட்சம் கோடி ரூபாயினைப் பெற்றுள்ளது. இதுவே சென்ற ஆண்டு 6.12 லட்சம் கோடியாக இருந்தது.

வரா கடன்

வரா கடன்

செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில்12.11 சதவீதமாக இருந்த வரா கடன் மதிப்பீடு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 13.31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு 7.55 சதவீதமாகக் குறைந்து இருந்தது.

 நடவடிக்கை

நடவடிக்கை

வங்கி இந்த மோசடி குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இந்த மோசடிக்குத் துணை போனவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பிற்பகல் 12:32 மணி நிலவரத்தின் படி 7.05 சதவீதம் என 11.40 புள்ளிகள் சரிந்து 150.25 ரூபாய் ஒரு பங்கு எனப் பஞ்சாப் நேஷ்னல் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

பஞ்சாப் நேஷன..." data-gal-src="http:///img/600x100/2018/02/niravmodi6-1518679759.jpg">
நிரவ் மோடி

நிரவ் மோடி

<strong>பஞ்சாப் நேஷனல் வங்கியை அலறவிட்ட நிரவ் மோடி யார் இவர்?</strong>பஞ்சாப் நேஷனல் வங்கியை அலறவிட்ட நிரவ் மோடி யார் இவர்?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PNB Shares slips 8% as Mumbai branch detects 1.77 bn fraud

PNB Shares slips 8% as Mumbai branch detects 1.77 bn fraud
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X