வியாழக்கிழமை ரிசர்வ் வங்கியின் 2 மாத நாணய கொள்கை கூட்டம் நடந்தது, இதில் கிரிப்டோகரன்சி குறித்த அறிவிப்பில், இந்தியாவில் தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ கிரிப்டோகரன்சி வாங்க அல்லது விற்பனை செய்ய உதவும் வங்கி, ஈவேலெட், இதர பணப் பரிமாற்ற முறைகளுக்கும் தடை விதிக்கப்பட உள்ளது.
மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலாக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இதுவரை இந்தியாவில் இயங்கி வந்த கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் நடுரோட்டில் நிற்கும் நிலையில் ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி
2018-19ஆம் நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டம் நேற்று நடந்து முடிந்தது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு ரெப்போ விகிதத்தைக் குறைக்கவில்லை.
கிரிப்டோகரன்சி வர்த்தகம்
இதனுடன் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மூலம் மக்கள் ஏமாறக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்குக் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்குச் சேவை அளிக்க முழுமையான தடை விதித்துள்ளது.
பணப் பரிமாற்ற
இதன் மூலம், இனி கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளத்தில் பணப் பரிமாற்றம் செய்யும் எல்லா வழிகளையும் முடக்கியுள்ளது.
இணைய வங்கி சேவை மூலம் வர்த்தகத் தளத்தின் ஈவேலெட்-க்கு கூடப் பணப் பரிமாற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் எச்சரிக்கை
பட்ஜெட் அறிக்கை தாக்கலின் போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி கிரிப்டோகரன்சி வர்த்தகம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ள நிலையில், தற்போது ரிசர்வ் வங்கியும் இதன் மீதான வர்த்தகம் செய்ய வேண்டாம் என வங்கிகளுக்கு விடப்பட்டுள்ள தடைகள் மூலம் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாடுகள்
இந்தியாவைப் போல வெளிநாடுகளிலும் கிரிப்டோகரன்சி மீது அதிகளவிலான வர்த்தகம் செய்யப்பட்டாலும், அரசின் கடுமையான கட்டுப்பாடுகள், விதிகள் மூலம் தொடர்ந்து அதன் மீதான வர்த்தகம் நடந்து தான் வருகிறது.
ஆனால் இந்தியாவில் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல் நாடு
சொல்லப்போனால் உலகிலேயே கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு மிகப்பெரிய அளவிலான தடையை விதித்துள்ள நாடு என்பால் இந்தியா தான்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications