மேஹூல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்த ஆண்டிகுவா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ள நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹூல் சோக்ஸி இருவரையும் கைது செய்ய மத்திய அரசு பல வகையில் முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஆண்டிகுவாவில் தலைமறைவாக உள்ள மெஹூல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆண்டிகுவா அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

மோசடி

மோசடி

2012-ம் ஆண்டு முதல் நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஸி இருவருமே பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு 13,000 கோடி வரை கடன் பெற்று மோசடிகளைச் செய்துள்ளனர்.

புகார்

புகார்

பின்னர்ப் பஞ்சாப் நேஷ்னல்ல் வங்கி 2018-ம் ஆண்டுப் பிப்ரவரி மாதத்தில் செய்யப்பட்ட கணக்குகளின் ஆய்வின் போது இப்படி மோசடி நடைபெற்றுள்ளதைக் கண்டறிந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி சிபிஐ வசம் புகார் அளித்தது. இந்த வழக்கினை எடுத்துக்கொண்டு சிபிஐ விசாரிக்கும் போது மேலும் பல வங்கி மோசடிகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின.

தலைமறைவு

தலைமறைவு

மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஸி உள்ளிட்டவர்களைக் கைது செய்ய முயன்ற போது இருவரும் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து இருந்தனர். அதில் நீரவ் மோடி விஜய் மல்லையாவை போன்றே லண்டனில் உள்ளார்.

 மேஹூல் சொக்ஸி

மேஹூல் சொக்ஸி

மேஹூல் சோக்ஸியோ ஆண்டிகுவாவில் உள்ளார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் 2018 டிசம்பர் மாதம் தான் மேஹூல் சோக்ஸிக்கு ஆண்டிகுவா குடியுரிமை அளிக்கலாம் என்று மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளது. இது அரசியக் வட்டாரத்தில் மிகப் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஸி இருவரும் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்கள் என்றும் அதற்குச் சாட்சியே இந்தப் புகைப்படங்கள் என்று எதிர்க்கட்சிகள் பல ஆதாரங்களை வெளியிட்டன.

நீரவ் மோடி மற்றும் அவரது தங்கை

நீரவ் மோடி மற்றும் அவரது தங்கை

எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தினைத் தவிர்க்கும் வகையில் நீரவ் மோடியின் தங்கை புர்வி மோடிக்கும் இந்த மோசடியில் பங்கு உள்ளதாகவும் வழக்கில் சேர்த்தனர். ஆனால் இன்று வரை இவர்கள் குடும்பத்தில் இருந்து ஒருவரை கூடக் கைது செய்யவில்லை என்று தகவல்கள் கூறுகின்றனர். மறு பக்கம் மேஹூல் சொக்ஸி இந்தியா கொண்டு வரப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து என்று அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.

 கோரிக்கை

கோரிக்கை

இப்படிக் கடந்த 8 மாதங்களாக இவர்களைப் பிடிக்க முடியாமல் இந்திய அரசு தவித்து வந்த நிலையில் 73வது ஐநா பொதுக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ஆண்டிகுவா அமைச்சர் செட் கிரீனியும் சந்தித்துப் பேசினர். அப்போது மேஹூல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.

சம்மதம்

சம்மதம்

அதனை ஏற்ற ஆண்டிகுவா அமைச்சர் விரைவில் மேஹூல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் எப்போது என்று விவரங்களைத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Antigua Will Cooperate India On Mehul Choksi's Extradition

Antigua Will Cooperate India On Mehul Choksi's Extradition
Story first published: Friday, September 28, 2018, 12:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X