டெல்லி: பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கியின் போர்டு இயக்குநர்கள் தலைமையிலான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் மத்திய அரசு ஈக்விட்டி பங்குகளாக அளித்த 5,431 கோடி ரூபாயினை ஏற்க ஒப்புக்கொண்டு அனுமதி எளித்துளனர்.
இந்தப் பங்குகள் செபியின் விதிகளின் படி மத்திய அரசு அளிக்க இருப்பதாகப் போர்டு உறுப்பினர் குழு இடையிலான கூட்டத்திற்குப் பிறகு பஞ்சாப் நேஷ்னல் வங்கி தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
வங்கிகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளுக்கு இணங்க பொதுத் துறை வங்கிகளின் சந்தை மூலதனத்தினை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு ஜூலை மாதம் பஞ்சாப் நேஷ்னல் வங்கி உட்பட்ட பிற வங்கிகளுக்கும் சேர்த்து 11,336 கோடி ரூபாயினை அளிக்க முடிவு செய்து இருந்தது.
மறு மூலதனம்
சென்ற ஆண்டு மத்திய அரசு 2.11 லட்சம் கோடி ரூபாயினைப் பொதுத் துறை வங்கி நிறுவனங்களுக்கு மூலதனமாக அளிக்க இருப்பதாக அறிவித்து இருந்தது. அதில் 65,000 கோடி ரூபாயினை மத்திய அரசு இன்னும் அளிக்க வேண்டும்.
வாரா கடன்
பொதுத் துறை வங்கிகளின் வாரா கடன் 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததை அடுத்து ஏற்பட்ட சிக்கலால் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களுக்கு மறு மூலதனம் அளிப்பதாக அறிவித்தது.
பங்குகள் மற்றும் பத்திரங்கள்
மறு மூலதன திட்டத்தின் கீழ் பொதுத் துறை வங்கிகள் 1.35 லட்சம் கோடி ரூபாயினைப் பத்திரங்களாகவும், 58,000 கோடி ரூபாயினைப் பங்குகளாக அலிக்க முடிவு செய்துள்ளது.