ஹலோ சார்.. பான் கார்டு அப்டேட் செஞ்சிட்டீங்களா.. நூதன மோசடி.. தொட்டா சிக்கல் தான்..!!

டெல்லி: பான் 2.0 திட்டத்தின் மூலம் இந்தியாவில் கியூஆர் கோடு பொருத்தப்பட்ட பான் கார்டுகள் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன. மக்கள் ஆன்லைன் வாயிலாகவே இந்த புதிய பான் கார்டு பெற்றுக் கொள்ள முடியும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பான் கார்டு அப்டேட்டினை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடைபெறுவது தற்போது தெரியவந்துள்ளது.

மத்திய அரசு அண்மையில் பான் 2.0 என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி கியூஆர் கோடுடன் கூடிய புதிய பான் கார்டுகள் அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வருகின்றன. தற்போது நடைமுறையில் இருக்கும் பழைய பான் கார்டுகளை மக்கள் ஆன்லைன் வாயிலாகவே புதிய பான் கார்டுகளாக மாற்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அஞ்சல் வழியாகவும் பான் கார்டு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹலோ சார்.. பான் கார்டு அப்டேட் செஞ்சிட்டீங்களா.. நூதன மோசடி.. தொட்டா சிக்கல் தான்..!!

இந்த நிலையில் புதிய பான் கார்டு பெற்று தருவதாக கூறி மக்களிடையே பலரும் தற்போது மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் Protean (இதற்கு முன்பு NSDL) அல்லது UTIITSL இணையதளங்கள் வாயிலாக மட்டுமே புதிய பான் கார்டினை பெற முடியும்.

இந்த அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று பான் எண் மற்றும் ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்தால் போதும், அவருடைய அனைத்து விவரங்களும் அந்த தளத்தில் காண்பிக்கப்படும். அதனை உறுதி செய்தால் க்யூ ஆர் கோடுடன் கூடிய புதிய பான் கார்டு சம்பந்தப்பட்ட நபரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

பான் கார்டை நேரடியாக பெற வேண்டும் என விரும்புபவர்கள் 50 ரூபாய் கட்டணம் செலுத்தினால் அவர்களின் வீட்டு முகவரிக்கு புதிய பான் கார்டு வந்துவிடும். முழுக்க முழுக்க அரசு மட்டுமே புதிய பான் கார்டு வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது .இந்த நிலையில் தற்போது மக்களுக்கு புதிய பான் கார்டு வாங்கி தருவதாகவும் பான் கார்டனை அப்டேட் செய்து தருவதாகவும் கூறி பல்வேறு சைபர் மோசடிகள் நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி-க்கு அடுத்த மகுடம்.. ரூ.2200 கோடின்னா சும்மாவா பாஸ்..!!

போலியான இணையதளங்கள் வாயிலாகவும், ஹெல்ப்லைன் எண்களையும் வழங்கி மோசடியாளர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். யாரேனும் உங்களிடம் பான் கார்டினை அப்டேட் செய்து தருகிறேன் புதிய பான் கார்டு பெற்று தருகிறேன் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என மின்னஞ்சலோ அல்லது மெசேஜோ அனுப்பினால் அதனை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உங்களுடைய பான் கார்டு செல்லாததாக மாறிவிடும் உடனடியாக அப்டேட் செய்து விடுங்கள் என்பன போன்ற அழைப்புகளையும் மெசேஜ்களையும் அனுப்பி மோசடியாளர்கள் மக்களிடமிருந்து பணம் பறிக்கும் செயலிலும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் செயலிலும் ஈடுபடுகிறார்களாம் . எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+