நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சர்வதேச அளவில் பல்வேறு நெருக்கடியான நிலைகள் இருந்து வருகின்றன. ஆரம்பத்தில் கொரோனா, லாக்டவுன், பொருளாதாரம் வீழ்ச்சி, தற்போது ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, சீனாவின் கடுமையான கட்டுப்பாடுகள் என பல்வேறு நெருக்கடிகள் இருந்து வருகின்றன. இதன் காரணமாக நிதி சந்தைகள் மிக மோசமாகவே இருந்து வருகின்றன.
குறிப்பாக பங்கு சந்தைகள் பலமான சரிவினைக் கண்டு வருகின்றன. இந்த காலகட்டத்தில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம். எதில் தான் முதலீடு செய்வது என்ற பல கேள்விகள் எழுந்திருக்கும்.
இதற்கிடையில் பிரபல எழுத்தாளரான ராபர்ட் கியோசாகி, அவர் எழுதிய பிரபலமான பர்சனல் பைனான்ஸ் புத்தகம் Rich Dad Poor Dad-ன் எழுத்தாளராவர். இவர் தனது ட்விட்டரில் வரவிருக்கும் உலகளாவிய நிதி நெருக்கடியைப் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேமித்து வையுங்கள்
மேலும் ட்விட்டரில் வரவிருக்கும் உலகளாவிய நெருக்கடியினை எதிர்கொள்ள, உணவு, பிட்காயின், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை சேமிக்க கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலகம் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. இதனால் உலகத் தலைவர்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடும். இதனால் மக்கள் உணவு, பிட்காயின், விலைமதிப்பற்ற உலோகங்கள் என பலவற்றையும் சேமிக்க தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.
ட்விட்டர் பதிவு
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலகம் மிகப்பெரிய நிதி சவால்களை எதிர்கொண்டுள்ளது. உலகளாவிய பேரழிவு வருகின்றது. நம்பிக்கையற்ற தலைவர்கள் அவ நம்பிக்கையான விஷயங்களை செய்வார்கள். கடவுளே எங்கள் மீது கருணை காட்டுங்கள், தங்கம், வெள்ளி, உணவு,துப்பாக்கிகள், தோட்டாக்களை சேமியுங்கள் என பதிவிட்டுள்ளார்.
பிட்காயினுக்கு ஆதரவு
கியோசாகி பிட்காயினை ஆதரிப்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக பிட்காயினின் பலன்கள் குறித்து பலமுறை சுட்டிக் காட்டியுள்ளார். சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிட்காயின் பணத்தின் எதிர்காலம் என்றும் சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது.
விமர்சனம்
மற்றொரு ட்விட்டர் பதிவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஃபெடரல் வங்கியின் கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன், தலைவர் ஜெரோம் பவல் ஆகியோரை, கிரிப்டோகரன்சிகள் மீதான கட்டுப்பாட்டுக்கு கொள்கைகளுக்காக கடுமையாக விமர்சித்தார். அதோடு பிட்காயின் வெற்றி பெறும் என்றும் சுட்டி காட்டினார்.
பிட்காயின் சரிவு
இன்னொரு ட்வீட்டில் பிட்காயின் சரிவின் போது வாங்க ஊக்குவிக்கிறது. கிரிப்டோ சந்தைகளில் உள்ள பயம் மற்றும் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் வீழ்ச்சி காணவில்லை என கூறியுள்ளார்.
கிரியோசாகி சொல்வதைபோல் பிட்காயின், விலை உயர்ந்த ஆபரணங்களை சேமிக்காவிட்டாலும், எதிர்வரும் நிச்சயமற்ற எதிர்கால நலன் கருதி நிச்சயம் பாதுகாப்பானவற்றில் முதலீடு செய்வது நல்லது தானே.
More From GoodReturns

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications