உலகம் முழுக்க நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால், நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இன்னும் சொல்லப்போனால் கொரோனாவினால் 3,08,257 பேர் தாக்கம் அடைந்துள்ளனர். இதே 13,068 பேர் பலியாகியுள்ளனர். இந்தளவுக்கு கொரோனாவின் தாக்கம் உக்கிரம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொருளாதாரமும் சரிந்து வருகிறது. இதனால் சர்வதேச பங்கு சந்தைகள் வீழ்ச்சி கண்டு வருகின்றன.
விலை ஏற்றம்
இதனையடுத்து உலகளவில் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் பார்வையும் மஞ்சள் உலோகமான தங்கம் மீது விழுந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவு உச்சத்தினை கண்டது. அவ்வப்போது தங்கம் விலையானது வீழ்ச்சி கண்டு வந்தாலும், தொடர்ச்சியாக ஏற்றம் காணவே செய்கிறது.
விருப்பமான முதலீடு
இந்த நிலையில் அடுத்த வாரத்தில் தங்கம் விலை குறையலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் படி கடந்த 18 மாதங்களில் தங்கம் ஈட்டிய வருமானத்தினை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்களின் விருப்பமான உலோகமாக தங்கம் உள்ளது. இது சிறந்த வருவாயுடன் தரவரிசையில் முன்னிலை வகிக்கிறது. ஏற்கனவே பாதுக்காப்பு புகலிடமாக இருக்கும் தங்கம், தற்போது உலகில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் சிறந்த முதலீடாக கருதப்படுவதில் அப்படி ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை. இதனால் விலை ஏற்றமும் எதிர்பார்த்த ஒரு விஷயம் தானே.
உச்சத்தில் தங்கம்
ஆக மக்களின் சிறந்த முதலீட்டாளர்கள் பட்டியலில் இருக்கும் தங்கம், ஒரு அவுன்ஸூக்கு 1,700 டாலர்களுக்கும் மேல் வர்த்தகமாகியது. இது பல ஆண்டு உச்சமாகும். இது முக்கியமான நீண்டகால வட்டி விகிதங்கள், அதன் மூலம் கிடைத்த லாபம், அமெரிக்கா சீனா வர்த்தக மோதல்கள், அமெரிக்கா ஈரான் பதற்றங்கள் என பல காரணங்களினால் இந்த விலையானது ஆதரிக்கப்பட்டது.
விலை இப்படித்தான் இருந்தது
18 மாதங்களுக்கு முன்பு ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,200 டாலர்களில் இருந்து, 1,700 டாலர்கள் வரை சென்றது. இதே இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 45,000 ரூபாயினை தொட்டது. எனினும் தற்போது உலகளவில் பரவி வரும் கொரோனாவினால் இது தற்போது கொஞ்சம் தடுமாறி வர்த்தகமாகி வருகிறது.
அதிகரித்து வரும் பரவல்
இந்த நிலையில் முதன் முதலாக சீனாவில் நிலை கொண்ட கொரோனா வைரஸின் தாக்கம், தற்போது அடுத்ததாக ஐரோப்பா மற்றும் பல நாடுகளுக்கு படிப்படியாக பரவத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் முதலீட்டாளர்களின் உணர்வினைத் இது பாதிக்கத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக பங்கு சந்தையில் முதலீடுகள் குறைக்கப்பட்டு, தங்கத்தில் அதிகரித்து வருகின்றன.
முதலீட்டுக்கு வழிவகுத்தல்
இதே ஓபெக் நாடுகள் உற்பத்தி குறைப்பை செய்யாததால், ரஷ்யாவுடனான பேச்சு வார்த்திய தோல்வியில் முடிந்துள்ளதால், இது விலையுத்ததிற்கு வழி வகுத்துள்ளது. ஆக மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளுமே தங்கம் உள்பட பாதுகாப்பான முதலீடுகளில் ஈடுபட வாய்ப்பாக அமைந்தது. எனினும் ஒவ்வொரு நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி குறைப்பினை செய்தன.
நம்பிக்கையை கொண்டு வரலாம்
ஆக மத்திய வங்கிகளின் இந்த அவசர நடவடிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் ஒரு நம்பிக்கையை கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது. இது பங்கு சந்தைகள் மற்றும் தங்கம் மீதான நம்பிக்கையும் திரும்ப கொண்டு வரக்கூடும். எனினும் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் தங்கம் விலையானது மீண்டும் சமீபத்திய உயர்வினைக் தொடக்கூடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
வணிகங்கள் பாதிப்பு
எனினும் விலைகள் அவுன்ஸூக்கு 1,400 டாலர்கள் வரை சென்று திரும்பகூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் மற்றொரு அறிக்கையில் அமெரிக்கா மற்றூம் ஐரோப்பாவில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா தாக்கத்தினால் வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர் பொருளாதாரங்களை இது பாதிக்கும் என்பதால் இது நிச்சயமற்ற தன்மையை அடுத்த வாரத்தில் உருவாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வேலையின்மை குறித்த அறிக்கை
இந்த நிலையில் நிலவி வரும் சூழ்நிலையில் மந்த நிலை இன்னும் மேலோங்க வழிவகுக்கும். இது மேலும் வேலையிழப்புக்கு வழிவகுக்கும். இந்த நிலையில் வரும் வாரத்தில் அமெரிக்காவின் வேலையின்மை குறித்த அறிக்கை வெளியாகவுள்ளது. இது வரும் வியாழக்கிழமையன்று வெளியாகவிருக்கும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு தரவாக கருதப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது.
வேலையின்மை அதிகரிக்கலாம்
கடந்த வாரத்திலேயே வேலையின்மை விகிதம் 33% அதிகரித்துள்ள நிலையில், வரும் வாரத்தில் வெளியாக இருக்கும் அறிக்கை, இன்னும் ஏழு மடங்கு அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆக இது 2 மில்லியன் பேர் வேலையின்மை இல்லாமல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக இது 1982ன் ஒப்பிடுகையில் 6,95,000 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இது உலகளாவிய நிதி நெருக்கடியில் மார்ச் 2009ன் பிற்பகுதியில் 6,65,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
விலை அதிகரிக்கலாம்
எப்படி எனினும் நிலைமை இன்னும் மோசமடையும் பட்சத்தில் மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் உலோகங்களை முற்பட்டால், தங்கல் விலையேற்றம் தடுக்கப்படலாம். எனினும் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது நிச்சயம் தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.