நடப்பு நிதியாண்டில் ஆரம்பம் முதல் கொண்டே தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு செல்லும் நிலையில், மறுபுறம் தங்கம் விலையானது வரலாறு காணாத ஏற்றம் கண்டது.
கடந்த ஆண்டே நிலவி வந்த கடுமையான மந்த நிலைக்கு மத்தியில் தங்கம் விலையானது 25 சதவீதம் அதிகரித்தது.
கொரோனாவுக்கு முன்பே 25 சதவீதம் அதிகரித்த தங்கம் விலையானது, தற்போது அமெரிக்கா - சீனா பதற்றங்கள் காரணமாக கிடு கிடுவென ஏற்றம் கண்டு வருகிறது.
தங்கம் விலை
அமெரிக்கா சீனா இடையே நீடித்து வரும் பதற்றம், ரூபாயின் வீழ்ச்சி என பலவும் தங்கத்தினை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளன. ஆக உள்நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இதுவும் இங்கு விலையேற்றத்திற்கு காரணிகளாக அமைந்தன. இந்த நிலையில் எம்சிஎக்ஸ் மீதான தங்கம் விலையானது வெள்ளிக்கிழமையன்று 10 கிராமுக்கு 47,355 ரூபாயாகவும் இய்தே வெள்ளி விலையானது கிலோவுக்கு 900 ரூபாய் குறைந்து 47,741 ரூபாயாக உள்ளது.
வரலாற்று உச்சம்
இந்தியாவில் தங்கம் விலையானது வரலாற்று உச்சமான 48,000 ரூபாயினை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகப்படியான விலைகள் மற்றும் லாக்டவுன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தங்கத்தின் தேவையானது கடுமையாக வீழ்ச்சி கண்டது. அதே நேரம் தங்கத்தின் மீதான விலையில் இறக்குமதி வரி 12.5 சதவீதமும் மற்றும் 3 சதவீதமும் ஆகியவை அடங்கும்.
தங்கம் விலையை ஆதரிக்கலாம்
எனினும் இதெல்லாவற்றையும் மீறி, ராய்ட்ட்டர்ஸ் உத்தியோகபூர்வ உள்நாட்டு விலையை விட 20 டாலர்கள் வரை தள்ளுபடி வழங்கியதாக செய்திகள் வெளியாகியிள்ளது. பலவீனமான நுகர்வோர் தேவை, குறிப்பிடத்தக்க தலைகீழாக இருக்கக்கூடும். எனினும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் எதிர்மறையாக ஆதரிக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முதலீட்டு தேவை
சரிந்து வரும் பொருளாதார சூழ்நிலைகளுக்கு மத்தியில், நுகர்வோர் பற்றிய கவலைகள் தலைதூக்கக் கூடும். ஆக தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரிக்க இது காரணமாக அமையக்கூடும் என்று கோட்டக் செக்யூரிட்டீஸ் சமீபத்திய குறிப்பில் தெரிவித்துள்ளது. பிசிகல் தங்கத்தின் தேவையானது குறைவாக இந்தியாவில் இருந்தபோதிலும், முதலீட்டு தேவை வலுவாக இருந்தமையால் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டது.
பரிமாற்றம்
கடந்த மே மாதத்தில் பங்கு சந்தைகள் கொரோனா காரணமாக ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில், தங்கத்தில் 815 கோடி ரூபாய் மதிப்புள்ள நிதியினை கண்டது. இதே கொரோனா நெருக்கடி காலமான ஏப்ரல் மாதத்தில் 731 கோடி ரூபாய் நிதியானது உள் வந்தது. இதே ஆகஸ்ட் 2019 முதல் 3,299 கோடி ரூபாய் நிதியானது பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.