ஓசூர் விமான நிலையத்திற்காக 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் ஏரியா இதுதான்..!!
தமிழ்நாட்டின் விமான போக்குவரத்துத் சேவையும், வர்த்தக துறைக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு மாநிலத்தின் முக்கிய உற்பத்தி நகரமாக விளங்கும் ஓசூரில் மாபெரும் விமான நிலையத்தை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஓசூர் விமான நிலையத்திற்காக 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ள வேளையில் 2000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசுக்கு, புதிய முதலீடுகளையும், அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்கட்டமைப்பு சேவைகளை மேம்படுத்துவது மிகவும் அவசியமாக உள்ளது. இவை இரண்டும் பூர்த்தி செய்யும் இடமாக ஓசூர் விளங்கும் காரணத்தால் பிரம்மாண்ட சர்வதேச விமான நிலையத்தை அமைக்கும் திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்தார்.

ஓசூர் விமான நிலையத்திற்காக 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் ஏரியா இதுதான்..!!

தமிழ்நாடு அரசு ஓசூர் விமான நிலையத்தை அமைக்க 5 இடத்தை தேர்வு செய்த நிலையில், சமீபத்தில் இந்திய விமான போக்குவரத்து ஆணையம் (AAI) 2 இடங்களை தேர்வு செய்தது. 1. TAAL ஏரோட்ரோம், 2. ஓசூர் விமான நிலையத்திற்கு தெற்கே 2 கி.மீ தொலைவில், பெலகொண்டபள்ளி.

ஓசூர் விமான நிலையத்திற்காக 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் ஏரியா இதுதான்..!!

இவை இரண்டும் அருகருக்கே அமைந்திருக்கும் காரணத்தால் புதிய விமான நிலையம் அமையவுள்ள இடத்தை சுற்றி சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை கையகப்படுத்தும் பணிகளின் முதல் கட்டமாக, எந்த இடத்தில் எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்படும் என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் வரைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கிவிட்டதா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரையில் வெளியாகவில்லை.
2.5BHK சென்னையில் இப்போ இது தான் டிரெண்டு.. ஒட்டுமொத்த ஐடி ஊழியர்களின் ஃபேவரைட்..!

இந்த வகையில் இந்த புதிய விமான நிலையம் அமையவுள்ள இடம் தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் தாலுகாக்களில் பரவியுள்ளது. இதில் பெலகொண்டபள்ளி, கலுகொண்டபள்ளி, ஹோசபுரம், கோபனபள்ளி, முத்துகனபள்ளி, முகலூர், அச்செட்டிபள்ளி ஆகிய கிராமங்கள் இதில் அடங்கும்.

இந்த புதிய விமான நிலையம் அமையவுள்ள இடம், பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டி-யில் இருந்து வெறும் ஒரு மணி நேர தூரத்தில் அமைந்துள்ளது. இதனால், பெங்களூர் தொழில்நுட்பத் துறைக்கும், பெங்களூர் மக்களுக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும்.


பெங்களூரில் அதிகரித்து வரும் விமானப் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, மோசமாக டிராபிக் ஆகியவற்றின் காரணமாக, புதிய விமான நிலையம் அமைப்பது அவசியமாகிறது. இந்த புதிய விமான நிலையம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், உலகளாவிய இணைப்பிற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
எண்கிராமத்தின் பெயர்தாலுகா பெயர்ஏக்கர் அளவு
1பெலகொண்டபள்ளிதேன்கனிக்கோட்டை58.00
2கலுகொண்டபள்ளிதேன்கனிக்கோட்டை312.00
3ஹோசபுரம்தேன்கனிக்கோட்டை19.00
4கோபனபள்ளிஓசூர்447.00
5முத்து கனபள்ளிஓசூர்1170.00
6முகலூர்ஓசூர்107.00
7அச்செட்டிபள்ளிஓசூர்5.00
மொத்தம் 2118.00

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+