இந்தியாவின் கூகுள்-ஐ உருவாக்கிய VSS.மணி.. இப்போ முகேஷ் அம்பானி கையில்..!

தோல்வி என்பது நமது முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை என்பதுதான், நம்பிக்கையோடு தொடர்ந்து முயற்சி செய்தால் சாதிக்கலாம். இந்தியாவின் கூகுள் என்று அழைக்கப்படும் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் நிறுவனர் வி.எஸ்.எஸ். மணியின் வணிக முயற்சிகள் நமக்கு பெரிய நம்பிக்கை மற்றும் உத்வேகம் அளிக்கும்.

பெரிய அளவில் நிதி ஆதாரமும், வணிக நிபுணத்துவமும் இல்லாத போதிலும் வாடகை இடத்தில் தொடங்கி அந்நிறுவனத்தை அம்பானியே வாங்க ஆசைப்படும் உயர்வுக்கு உயர்த்தியுள்ளார்.

இந்தியாவின் கூகுள்-ஐ உருவாக்கிய VSS.மணி..  இப்போ முகேஷ் அம்பானி கையில்..!

நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் வி.எஸ்.எஸ். மணி டெல்லி பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த பின்னர் ஒரு நிறுவனத்தின் விற்பனை பிரிவில் பணியாற்றினார். தனது குடும்பத்தை பராமரிக்க வேண்டிய கட்டாயம் காரணமாக இந்த வேலையை செய்தார்.

ஆனால் அவரது இலக்கு சார்ட்டட் அக்கவுன்டன்ட் ஆக வேண்டும் என்பதுதான். 1989ல் AskMe என்ற நிறுவனத்தை தொடங்கினார் ஆனால் தோல்வியில் முடிவடைந்தது. 1992ல் திருமண திட்டமிடலுக்காக ஒரு பத்திரிகையை தொடங்கினார். அதுவும் இறுதியில் தோல்வியை பரிசாக கொடுத்தது.

பின்னர் தொலைபேசி டைரக்டரி மற்றும் எல்லோ பேஜ்ஐஸுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தில் பணியாற்றினார். இது அவருக்கு ஜஸ்ட் டயல் என்ற மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க அடிப்படையாக அமைந்தது. பின்பு தனது தனிப்பட்ட சேமிப்பு மற்றும் மனைவி கொடுத்த நகைகளை மூலதனமாக போட்டு ஜஸ்ட் டயல் நிறுவனத்தை தொடங்கினார்.

ஆன்லைன் டைரக்டரியை தயாரித்தார், ஜஸ்ட் டயல் நிறுவனம் உணவகங்கள், ஹோட்டல்கள், கடைகள், மெக்கானிக் மற்றும் எல்க்ட்ரீஷியன்கள் போன்ற வணிகங்களுக்கான தொடர்பு தகவலை கண்டுபிடிப்பதை அனைவருக்கும் எளிதாக்கியது. வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையிலான தொடர்பை இந்நிறுவனம் எளிதாக்கியது.

ஜஸ்ட் டயல் ஆரம்பத்தில் ஒரு தொலைபேசி சேவையாக இருந்தது. தொலைப்பேசி இணைப்பை பெறுவதற்கான இணைப்பை எளிதாக்கிய 1996ல் கொண்டு வரப்பட்ட தொலைப்பேசி தாராளமயமாக்கல் கொள்கையை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். லேண்ட்லைன் இணைப்புகளின் எண்ணிக்கை உயர உயர ஜஸ்ட் டயல் நிறுவனமும் வளர்ந்தது.

வி.எஸ்.எஸ். மணி நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் நோக்கில் 2013 மே மாதத்தில் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கி நிதி திரட்டினார். இதனையடுத்து ஜஸ்ட் டயல் நிறுவன பங்குகளின சந்தை மதிப்பு அப்போது ரூ.4,000 கோடியாக மதிப்பிடப்பட்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி வாங்க விரும்பும் அளவுக்கு ஜஸ்ட் டயல் வர்த்தகம் வெற்றியடைந்தது. 2021ல் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ரீடெய்ல் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 67 சதவீத பங்குகளை ரூ.3,497 கோடிக்கு கையகப்படுத்தியது.

இதில் வி.எஸ்.எஸ். மணிக்கு அவரது 41 சதவீத பங்குகளுக்காக ரூ.1,332 கோடியை ரிலையன்ஸ் ரீடெய்ல் கொடுத்தது. எஞ்சிய ரூ.2,165 கோடிக்கு புதிய பங்குகளை வாங்கியது. ஜஸ்ட் டயல் நிறுவனத்தை அம்பானி வாங்கி விட்டாலும், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக வி.எஸ்.எஸ். மணி தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தற்போது ஜஸ்ட் டயல் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.5,983 கோடியாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+