அண்ணன் சொல்லிட்டாரு.. 3 வருடத்தில் நடக்கும்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன முக்கியமான விஷயம்!

தமிழ்நாடு விளையாட்டுத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் உலகம்தரம் வாய்ந்த புதிய சர்வதேச விளையாட்டு அரங்கத்தை அமைக்க விஜய் தலைமையிலான அரசு திட்டமிட்டு வருவதை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, கடந்த 30 வருடமாக தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, குஜராத் மாநிலங்களில் சர்வதேச தரத்தில் தங்களுடைய விளையாட்டு மைதானத்தை மேம்படுத்திவிட்டனர்.

அண்ணன் சொல்லிட்டாரு.. 3 வருடத்தில் நடக்கும்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன முக்கியமான விஷயம்!

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் இன்னும் இதே மைதானத்தை வைத்துக்கொண்டு, இதையும் முழுமையாக மேம்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஒரு தேசிய அளவிலான போட்டிகள் நடத்த வேண்டும் என்றால் கூட அதற்கான உள்கட்டமைப்பு தமிழ்நாட்டில் இல்லை என தெரிவித்தார் ஆதவ் அர்ஜுனா.

இந்த நிலையில் தான் நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வருடன் பேசும் போது இதை முன்வைத்தேன், அதற்கு அண்ணன் விஜய் (முதல்வர்) CAPEX செலவுகள் என்றால் கணக்கே பார்க்க வேண்டாம், உடனடியாக நீங்க துவங்கலாம் என உத்தரவாதம் கொடுத்தர் என ஆதவ் அர்ஜுனா கூறினார்.

Also Read

கூடிய விரைவில் முதலமைச்சர் விஜய் ஒப்புதலோடு உருவாக்கப்படும் இந்த திட்டத்திற்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பும், நிதி ஒதுக்கீடும் அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ள 2026-27ஆம் நிதியாண்டிக்கான பட்ஜெட்டில் வெளியாகும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

மேலும் இது வெறும் அறிவிப்பாக மட்டும் அல்லாமல் குறைந்தபட்சம் 3 வருடத்தில் திட்டம் செயல்படுத்தப்பட்டு முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார் ஆதவ் அர்ஜுனா. இதேபோல் தமிழ்நாடு விரைவில் சர்வதேச விளையாட்டுக்கான HUB ஆக மாறும் என நான் அண்ணன்-யிடம் நான் உறுதிமொழி கொடுத்திருக்கிறேன் எனவும் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

Recommended For You

கோயம்புத்தூரில் சர்வதேச கிரிட்கெட் மைதானம்

இதேவேளையில் தற்போது கோயம்புத்தூரில் சர்வதேச கிரிட்கெட் மைதானம் அமைக்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒண்டிப்புதூரில் நிலம் அடையாளம் காணப்பட்டு TIDCO அத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ஆனால் தவெக ஆட்சிக்கு வந்த பின்பு இத்திட்டம் மறுஆய்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அளித்துள்ள சில பரிந்துரைகள் அடிப்படையில் ஆய்வு செய்ய தற்காலிமாக இத்திட்டத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதர விளையாட்டு உள்கட்டமைப்பு

இதேபோல் OMR சாலையில் இருக்கும் செம்மஞ்சேரி-யில் குளோபல் ஸ்போர்ட் சிட்டி, தாம்பரத்தில் 4000 பேர் அமர்ந்து பார்க்கும் வரையில் அரினா, 20000 இருக்கைகள் கொண்ட வேலம்மாள் சர்வதேச கிரிக்கெட் மைதானமும் அமைக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+