இந்திய பங்குசந்தையும் சரி, ரூபாய் மதிப்பு சரி சர்வதேச முதலீட்டு சந்தையின் தாக்கத்தை அதிகம் கொண்டு உள்ளது, அதிலும் அமெரிக்க முதலீட்டு சந்தையின் தாக்கம் அதிகமாக இந்திய சந்தை கொண்டு உள்ளது. இந்த நிலையில் ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் எதிர்பார்த்து காத்திருந்து அமெரிக்க மத்திய வங்கியின் முடிவு நேற்று இரவு வெளியானதில் இருந்து இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்காவில் பணவீக்க பாதிப்புகள் அதிகமாக இருப்பது அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் வேளையில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து வருவதும் தலைவலியாகவே மாறிவிட்டது. இந்த நிலையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் எப்போது வட்டி விகிதத்தை குறைக்கும் என தெரியாமல் இருந்த நிலையில் இந்த வாரம் துவங்கி நாணய கொள்கை கூட்டம் துவங்கியது.

இதில் அனைவரும் எதிர்பார்த்தப்படியே நவம்பர் 1 ஆம் தேதி பெடரல் ரிசர்வ் 2023 ஆம் ஆண்டு முடியும் வரையில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 5.25 - 5.50 சதவீதம் என்ற 22 வருட உச்ச அளவை தொடர்ந்து தக்க வைக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 2வது முறையாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் பணவீக்க அளவீட்டை 2 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வரும் முயற்சியில் தொடர்ந்து செயல்படும் என அறிவித்துள்ளது.
இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தை, இந்திய ரூபாய் மதிப்பு, தங்கம் விலை என அனைத்திலும் எதிரொலித்துள்ளது. இதனால் இன்று இந்திய முதலீட்டாளர்களுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் சிறப்பான ஆள் நீ என்பது போல சிறப்பான நாளாக அமைந்துள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 64,202.64 புள்ளிகளை எட்டியுள்ளது. நேற்றைய வர்த்தக முடிவில் 63,591 புள்ளிகளை எட்டியுள்ள வேளையில், தற்போது 446.10 புள்ளிகள் உயர்ந்து 64,037.43 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 133.15 புள்ளிகள் உயர்ந்து 19,122.30 புள்ளிகளை எட்டியுள்ளது. அதிகப்படியாக 19,175.25 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதேபோல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் 83.44 வரையில் சரிந்த நிலையில், இன்றி 83.22 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்றை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 83.29 வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெடரல் ரிசர்வ்-ன் இரு நாள் நாணய கொள்கை கூட்டம் துவங்கிய கடந்த இரண்டு நாட்களில் 20 டாலருக்கும் அதிகமாக சரிந்துள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2003 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இன்று 1984 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications