வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்புகள் மத்தியில், எதையும் பொருட்படுத்தாமல் ஒபாமா நிர்வாகம் பாகிஸ்தான் நாட்டிற்கு 8 எப்-16 ரகப் போர் ஜெட் விமானங்களை அளிக்க ஒப்புக்கொண்டது.
இதற்கு இந்திய அரசும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தி ஊடகங்களில் சூடு தனியும் முன்னரே ஒபாமா பாகிஸ்தான் விமானப் படையைக் கூடுதல் வலிமைப்படுத்தும் விதிமாக AH-1Z வைப்பர் ரகத் தாக்குதல் விமான அளிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது அமெரிக்கா.
ஒபாமா அரசு
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் இந்திய அரசு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்ததும் ஒபாமா அரசு சற்றும் காதில் வாங்காமல் பாகிஸ்தான் விமானப் படையை வலிமைப்படுத்தும் விதமாக (தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் விதமாக) அதிநவீன எட்டு எப்-16 ரகப் போர் ஜெட் விமானங்களை அளிக்க ஒப்புக் கொண்டது.
வைப்பர் தாக்குதல்
இந்நிலையில் தற்போது வெளிநாடுகளுக்கு ஆயுதம் விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ் 170 மில்லியன் டாலர் மதிப்பிலான 9 AH-1Z வைப்பர் ரகத் தாக்குதல் விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
பென்டகன்
பெல் ஹெலிகாப்டர் எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்த AH-1Z வைப்பர் ரகத் தாக்குதல் விமானங்களைத் தயாரித்துப் பாகிஸ்தான் நாட்டிற்கு டெலிவரி செய்யும் திட்டத்தை வெளிநாடுகளும் ஆயுத விற்பனை திட்டத்தின் கீழ் ஒப்பந்த வடிவில் பென்டகன் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை
இதுகுறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தான் நாட்டிற்கு டெலிவரி செய்ய உள்ள AH-1Z வைப்பர் ரகத் தாக்குதல் விமானங்களைப் போர்ட் வொர்த் மற்றும் அமரிலோ தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் எனவும், இதன் பணிகள் வருகிற செப்டம்பர் 2018ஆம் வருடம் முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 6.. 950 மில்லியன் டாலர் டீல்..
இந்த 9 AH-1Z வைப்பர் ரகத் தாக்குதல் விமானங்கள் கொள்முதல் 950 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியே. இந்த ஒப்பந்தத்தின் கீழ் 9 auxiliary fuel kitகளும் பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்க அளிக்க உள்ளது.
பாகிஸ்தான்
அமெரிக்க அளித்துள்ளது 950 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் என்றால், பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கோரிய ஆயுதங்கள் பட்டியல் மிகவும் அதிகம்.
சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வாங்க அமெரிக்காவிடம் கொள்முதல் பட்டியலை அளித்துள்ளது பாகிஸ்தான்.
ஆயுத கொள்முதல்
தற்போது அமெரிக்க அளிக்கும் ஆயுதம் மற்றும் போர் விமானங்கள் மூலம் தெற்கு ஆசிய பகுதியில் ஏற்படும் போர் சூழலை எளிதாகப் பாகிஸ்தான் நாட்டால் எதிர்கொள்ள முடியும் என Defence Security Cooperation Agency தெரிவித்துள்ளது.
இந்தியா
இதனால் இந்தியாவிற்குப் பாதுகாப்பு சார்ந்த எச்சரிக்கைகள் எழுந்துள்ளது. இதனை எதிர்கொள்ள இந்திய அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டு வருகிறது.
வளைகுடா நாடுகள்
ரிலையன்ஸ் ஜியோ
அதானி குழுமம்
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை தடாலடி உயர்வு.. ஆப்கானிஸ்தான் தாக்குதல் மத்தியில் IMF கொடுத்த நெருக்கடி..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications