உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில், தற்போது அதிபராக இருக்கும் பாரக் ஓபாமா-வின் பதவிக் காலம் வருகிற நவம்பர் மாதத்துடன் முடிவடைவதால், அடுத்த அதிபர் பதவிக்கான போட்டி மற்றும் பிரச்சாரம் சூடுப்பிடித்து வருகிறது.
மே மாத முடிவில் அதிபர் பதவியைப் பிடிக்கும் போட்டியில் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகியோர் முன்னணியில் உள்ளனர். எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை அமெரிக்க அதிபர் பதிவியை பிடிக்க வேட்பாளர்கள் மத்தியில் போட்டி அனல் பறக்கிறது. சரி இதில் இந்தியர்களைய தொடர்ந்து கேலி செய்து விமர்சனம் செய்துவரும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்..?
அரசியல் கட்சிகள்
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் Democratic கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன், Republican கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவின் தற்போதைய அதிபரான பராக் ஓபாமா Democratic கட்சியைச் சார்ந்தவர்.
கட்சிகளும்.. இந்தியாவும்..
பொதுவாக Democratic கட்சிக்கும் இந்தியாவிற்கும் நல்ல நட்புறவு மற்றும் வர்த்தக இணைப்பு உண்டு, இதன் மூலம் 8 வருடம் First ladyயாகவும், 8 வருடம் அமெரிக்கச் சென்னேடராகவும், 4 வருட மாநில செயலாளராகப் பணியாற்றிய ஹிலாரி கிளிண்டன் அதிபர் தேர்தலில் வெற்றிப்பெறால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள நட்பில் தொய்வு இருக்காது.
ஆனால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் இருக்கும். ஆச்சரியமாக உள்ளதா..? உண்மைதான்.
டொனால்டு டிரம்ப்
ஆனால் இந்தியாவைப் பற்றியும், இந்தியர்களைப் பற்றியும், தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் Republican கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால் குண்டு சட்டிக்குள் இருந்த குதிரை வெளியில் ஓடத் துவங்கும்.
அதாவது இந்தியாவின் பொருளாதாரமும், உலகநாடுகளுக்கு மத்தியில் உள்ள வர்த்தக வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சி அடுத்தப் படிக்கும் செல்லும். எப்படி.. ? வாங்க பார்ப்போம்.
அவுட்சோர்சிங்
எப்படி? இந்திய கால் சென்டர் அதிகாரியைப் போல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசி இந்தியர்களைக் கேலி செய்தும், அவுட்சோர்சிங்-க்கும் முற்றிலும் எதிராகவும், ஆசிய நாடுகள் உடனான வர்த்தக வாய்ப்புகளுக்கு எதிராக இருக்கும் டொனால்டு டிரம்ப்-இன் வெற்றி இந்தியாவிற்குச் சாதகமாக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வி.
பதில் இதோ..
டொனால்டு டிரம்ப்-இன் வெற்றி முதலில் சீனாவிற்கு மிகப்பெரிய பாதிப்பாக அமையும். அதுமட்டும் அல்லாமல் மொத்த ஆசிய சந்தைக்கும் இது மிகப்பெரிய பாதிப்பாக அமைந்தாலும், இந்தியா இதன் மூலம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைக் காண உள்ளது என்பதே இவரின் வெற்றிக்குள் புதைந்துள்ள உண்மை.
சீனா, பாகிஸ்தான்
கடந்த 10 வருடங்களாகப் பணம் கரக்கும் பசுமாடு போல அமெரிக்கா சீனாவிற்கும், பாகிஸ்தான் நாட்டிற்கும் செயல்பட்டு வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இனால் சீனா 2015ஆம் ஆண்டில் உபரியாக 366 பில்லியன் டாலர் வர்த்தகத்தை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் அரசின் இரட்டை விளையாட்டு மூலம் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் சுமார் 30 பில்லியன் டாலர் நிதிதொகையை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இந்த 30 பில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்க அளித்ததற்கு முக்கியக் காரணம், பாகிஸ்தான் அரசு இஸ்லாம் ஆதிக்கம் இல்லாத நாட்டை அமைப்பதாகக் கூறிய வாக்குறுதி. ஆனால் இன்றுவரை இதற்காக ஒரு பணியைக் கூடப் பாகிஸ்தான் செய்யவில்லை.
நிதியுதவி துண்டிப்பு
அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால் இருநாடுகளுக்கும் அமெரிக்கா அளித்து வரும் நிதியுதவி மற்றும் வர்த்தக வாய்ப்புகள் கண்டிப்பாகக் குறையும்.
உற்பத்தி வேலைவாய்ப்புகள்
கடந்த 15 வருடத்தில் உற்பத்தித் துறை சார்ந்த சுமார் 50 லட்ச வேலைவாய்ப்புகளை அமெரிக்கா இழந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் சீனா உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் மிகப்பெரிய வர்த்தக வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
இந்நிலையில் டொனால்டு டிரம்ப் வெற்றிக்குப் பின் அமெரிக்காவில் அதிகளவிலான உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதே டிரம்ப்-இன் முக்கியத் தேர்தல் வாக்குறுதி.
2017 எப்படி இருக்கும்..
இதன் மூலம் டொனால்டு டிரம்ப் வெற்றிக்குப் பின் 2017ஆம் ஆண்டில் சீனா நாட்டிற்குச் சனி உச்சத்தில் இருக்கும் என்பதற்கு எவ்விதமான சந்தேகமும் இல்லை.
தொடர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் சீனா கடந்த 10 ஆண்டுகளில் அதிகளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளது. இதன் மூலம் சீன பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி குமிழ் உருவாகியுள்ளது. 2017ஆம் பின் இது கண்டிப்பாக உடையும்.
பாகிஸ்தான்
மேலும் பாகிஸ்தான் நாட்டிற்கு நிதியுதவியைத் துண்டித்தால் மட்டும் போதும் மொத்த நாடும் பொருளாதார வீழ்ச்சியில் மூழ்கிப்போகும்.
இந்தியா
சீனாவின் வீழ்ச்சியே இந்தியாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பாகும், இதற்குக் கூடுதலாக வலிமை சேர்க்கும் விதமாக அவ்வப்போது இந்தியாவின் வலிமையைச் சோதித்துப் பார்க்கும் பாகிஸ்தான் பொருளாதார வீழ்ச்சியில் மூழ்கும்போது. இந்தியாவின் வளர்ச்சி மிகப்பெரிய உச்சத்தை அடையும்.
செக் வைக்கும் டிரம்ப்
கூடுதலாக, பாகிஸ்தான் நாட்டிற்குச் செக் வைக்க இந்தியாதான் சரியான ஆட்டநாயகன் என்று ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் டிரம் பேசியுள்ளார்.
8 வருடத்திற்கு முன் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையைத் தீர்க்க பராக் ஒபாமா தலையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மென்பொருள் துறை
டிரம்ப் வெற்றி பெறுவதன் மூலம் 160 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய மென்பொருள் துறை மிகப்பெரிய சரிவை சந்திக்க வாய்ப்புகள் உண்டு ஆனால் இந்தப் பாதிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே தவிர ஊழியர்களைப் பாதிக்காது.
மேக் இன் இந்தியா
உலகிலேயே உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் மிகப்பெரிய இடத்தைப் பெற்றுள்ள சீனா வீழ்ச்சி அடைந்தால், உலக நாடுகளுக்கு அடுத்த வாய்ப்பு இந்தியா தான். காரணம் பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம்.
ஆசிய சந்தை
தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் மொத்த ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையின் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளை உடையது இந்தியா தான். இதுவே இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து.
சரி வெற்றி யாருக்கு..
உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்ற ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் டொனால்டு டிரம்ப்-க்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறது. உதாரணமாக 6க்கு 1 என்ற கணக்கில் வெற்றிபெறுவார்.
என்ஆர்ஐ-க்கு அடித்தது ஜாக்பாட்..
அதிக சம்பளமும், மனநிறைவும்
சாப்ட்வேர் துறையை விட அதிக சம்பளமும், மனநிறைவும் கிடைக்கும் துறை இது..!
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..