சுப்ரதா ராய் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!!

டெல்லி: சஹாரா நிறுவனத்தின் 24,000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான இந்நிறுவன தலைவர் சுப்ரதா ராய் மற்றும் இரு தலைவர்களை கைது செய்து டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கான ஜாமீன் மனுவை பல முறை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் தற்போது மீண்டும் நிராகரித்தது.

இந்த ஜாமீன் மனுவுடன் சுப்ரதா ராய் தரப்பில் 21 முன் தேதியிட்ட காசோலைகள் மற்றும் 1,885 கோடி ரூபாய் 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதத்திற்கு முன் செலுத்துவதாக தெரிவித்தும் மனுவை நிராகரிப்பு செய்தது நீதிமன்றம்.

மார்ச் 4

மார்ச் 4

சஹாரா நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான சஹாரா ஹவுசிங் மற்றும் சஹாரா ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பேரில் கடனீட்டுப் பத்திரங்கள் கொண்டு முறைகேடாக பணம் திரட்டியதாகவும், பங்குதாரர்களுக்கு முறையாக பங்கிட்டுத் தொகை அளிக்காத காரணத்தினாலும் சுமார் 24000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் ராய் மற்றும் இரு நிறுவன தலைவர்கள் மார்ச் 4ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

ஜாமீன் நிபந்தனை

ஜாமீன் நிபந்தனை

மேலும் மூவரும் ஜாமீன் பெற 5,000 கோடி ரூபாய் பணமாகவும், 5000 கோடி வங்கி உத்திரவாதமாகவும் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

நிதி திரட்டல்

நிதி திரட்டல்

இந்நிலையில் சஹாரா குழுமத்தின் ஜோத்பூரில் உள்ள சொத்துகளை விற்றதில் 77 கோடி ரூபாய் கிடைத்து, இதேபோல் இந்நிறுவனத்தின் ஹோட்டகளை அடமானம் வைத்து பாங்க் ஆஃப் சீனா 650 மில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ளது. கூடுதலாக 400 மில்லியன் டாலர் நிறுவன முதலீடாகவும் கடன் அளித்துள்ளது.

1.8 இலட்சம் கோடி

1.8 இலட்சம் கோடி

மேலும் இந்நிறுவனத்திடம் 1.8 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக நிறுவனத்தின் கணக்குகள் மற்றும் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் 10,000 கோடி ரூபாய் திரட்ட இந்நிறுவனம் மூக்கால் அழுகிறது. கடந்த 10 மாதமாக இந்நிறுவனத்தின் தலைவர் ஜெயிலில் உள்ளார். பயபுள்ள பொய் சொல்லிட்டான் போல...

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+