பெங்களுரூ: இந்திய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், கடந்த அக்டோபர் மாதம்மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையை அறிவித்தது, அதன் பெரியதான் "பிக் பில்லியன் டே". இதன்விளைவு என்வென்று பார்த்தால் பிளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு பிரச்சனைகள், ஏமாற்று வேலைகள் நடந்தது.
இத்தனை பாடங்கள் கற்ற பின்னரும் பிளிப்கார்ட் நிறுவனம் அடுத்த 6 மாதத்திற்குள் மீண்டும் ஒரு பிக் பில்லியன் டே நடத்த உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர்கள் சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் தெரிவித்தனர்.
சச்சின் பன்சால்
பிக் பில்லியன் டே எங்களுக்கு மிகப்பெரிய பாடங்களை கற்றுக்கொடுத்தது, மேலும் அடுத்த பிக் பில்லியன் டேவில் இதுபோன்ற பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து பிரிவுகளையும் மேம்படுத்தியுள்ளோம் என பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில்ஒருவரான சச்சின் பன்சால் தெரிவித்தார்.
அக்டோபர் 6
அன்று ஒரு நாள் மட்டும் இந்நிறுவனத்தின் இணையதளம் மூலமாக 1.5 மில்லியன் வாடிக்கையாளர்கள்100 மில்லியன் டாலருக்கும் மதிப்பிற்கும் அதிகாமன பொருட்களை வாங்கியுள்ளனர். இதில் பலர் பல விதமான பிரச்சனைகளை சந்தித்ததனர்.
பிளிப்கார்ட்
அடுத்த பிக் பில்லியன் டே-விற்காக இந்நிறுவனம் தனது தொழில்நுட்பம் வலிமையை இரட்டிப்பாக்கதிட்டமிட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் விநியோக முறையை மேம்படுத்தஅதிகளவிலான முதலீட்டை செய்துள்ளது. மேலும் இன்நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவில்பணியாளர்களை அதிகரிக்க பிளிப்கார்ட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
9 அமைச்சகம்
இத்துறையில் நிலவும் பிரச்சனை மற்றும் ஏமாற்று வேலைகள் அதிகரித்ததால் இந்திய ஆன்லைன்சில்லறை வர்த்தகத்தை 9 அமைச்சகத்தின் கண்காணிப்பில் வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதனுடன் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளும் அடங்கும்.
பிளிப்கார்ட் "பிளாப்கார்ட்" ஆன கதை
கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடந்த பிக் பில்லியன் டேவில் நடந்த மொத்த கூத்தையும் பார்க்கஆசையா இதை கிளிக்குங்கோ....
உஷார்
மேலும் சில நாட்களுக்கு முன்பாக ஸ்னாப்டீல் நிறுவனம் நடந்த செய்த அக்கபோரை பாருங்கள்!!


Click it and Unblock the Notifications