மும்பை பங்குச்சந்தையில் இன்று மார்ச் மாதத்திற்கான ஆர்டர்கள் முடிவடையும் காரணமாகவும், லாப நோக்கில் முதலீட்டாளர்கள் அதிகளவில் பார்மா மற்றும் வங்கித்துறை பங்குகளை விற்பனை செய்ததால் சென்செக்ஸ் இன்று 380 புள்ளிகள் வரை சரிந்தது.
இன்றைய வர்த்தகம் துவங்கும் முதலே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை வர்த்தகம்
நீண்ட விடுமுறை, அமெகரிக்கச் சந்தையின் பொருளாதார அறிக்கை, மார்ச் மாத ஒப்பந்த முடிவுகள் மற்றும் முதலீட்டாளர்களின் அதிகளவிலான பங்கு விற்பனை ஆகியவை இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தை அதிகளவில் பாதித்துள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவடை துவங்கிய மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் 1.48 சதலீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.
வங்கி மற்றும் பார்மா துறை
இன்றைய வர்த்தகத்தில் வங்கி, பார்மா மற்றும் ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் இத்துறை நிறுவனப் பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ்
திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர் சரிவில் 371.16 புள்ளிகளை இழந்து 24,966.40 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று அதிகளவிலான சரிவை சந்தித்தது. இதன் அடிப்படையில் 101.40 புள்ளிகளை இழந்த நிஃப்டி 7,615.10 புள்ளிகளை அடைந்து திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
ஷேர் ட்ரேடிங்
வங்கிச் சேவை
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..