'ஏர்டெல் எம்': இந்தியாவின் முதல் மேமென்ட் வங்கியைத் துவங்கியது பார்தி ஏர்டெல்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் குழுமம், மேமென்ட் வங்கி சேவை அளிப்பதற்கான இறுதிக்கட்ட ஒப்புதலை ரிசர்வ் வங்கியிடம் செவ்வாய்க்கிழமை பெற்றுள்ளது.

இதன் மூலம் நாட்டிலேயே முதல் பேமென்ட் வங்கியாக ஏர்டெல் எம் காமர்ஸ் சர்வீசஸ் லிமிடெட் திகழ்கிறது.

(தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 12% ஊதிய உயர்வு நிச்சயம்..!)

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்தியாவில் மேமென்ட் வங்கி சேவைகளை அளிக்க ரிசர்வ் வங்கி விண்ணப்பம் கோரியபோது, சுமார் 41 நிறுவனங்கள் மிகுந்த ஆர்வமுடன் முன்வந்தது.

இதில் ரிசர்வ் வங்கி வெறும் 11 வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

ஏர்டெல்

ஏர்டெல்

இந்த 11 நிறுவனங்கள் பட்டியலில் வோடபோன், ரிலையன், ஆதித்தியா பிர்லா நுவோ, பேடிஎம், சன் பார்மா, சோழமண்டலம் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் பேமென்ட் வங்கிகளை அமைப்பதற்கான உரிமத்தை தட்டிச் சென்றது.

ஆனால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து இறுதிக்கட்ட ஒப்புதலை பெற்ற முதல் நிறுவனம் ஏர்டெல் தான்.

 

போட்டி..

போட்டி..

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் சேவை அறிமுகத்திற்கு முன்னே அனைத்து விதிமான வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வரும் ஏர்டெல் தற்போது முகேஷ் அம்பானிக்கு முன்னரே இறுதிக்கட்ட ஒப்புதலை பெற்றுள்ளது.

18 மாத கெடு..

18 மாத கெடு..

கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதி பெற்ற 11 நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி 18 மாதங்கள் கெடு விதித்திருக்கிறது. இக்காலகட்டத்திற்குள் பேமென்ட் வங்கி சேவை அளிப்பதற்கான அனைத்துப் பணிகளையும் அனுமதி பெற்ற நிறுவனங்கள் முடித்திருக்க வேண்டும், இல்லையெனில் உரிமம் ரத்துச் செய்யப்படும்.

தற்போதைய நிலையில் அனுமதி பெற்ற 11 நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இறுதிக்கட்ட ஒப்புதலை பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவில்லை.

 

மஹிந்திரா - ஏர்டெல்

மஹிந்திரா - ஏர்டெல்

இந்நிலையில் நாட்டின் முதல் பேமென்ட் வங்கியான ஏர்டெல் எம் காமர்ஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் கோட்டாக் மஹிந்திரா வங்கி 19.9 சதவீத பங்குகளில் முதலீடு செய்துள்ளது.

ஏதற்கு இந்தக் கூட்டணி..? காரணம் இருக்குப் பாஸ்..

 

என்ன காரணம்..?

என்ன காரணம்..?

பொதுவாகப் பேமென்ட் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குக் கடன் அளிக்க முடியாது. இந்நிலையில் கூட்டணி நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் கடன் சேவை அளிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் படி ஏர்டெல் எம் நிறுவனத்துடன் பங்கு கைப்பற்றுதல் மூலம் கோட்டாக் மஹிந்திரா வங்கி கூட்டணி வைத்துள்ளது.

 

விளக்கமும்.. வித்தியாசமும்..

விளக்கமும்.. வித்தியாசமும்..

<strong><em>பேமெண்ட் வங்கி என்றால் என்ன?.. சாதாரண வங்கிகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்..?</em></strong>பேமெண்ட் வங்கி என்றால் என்ன?.. சாதாரண வங்கிகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்..?

சிறு வங்கிகள்

சிறு வங்கிகள்

<strong><em>சிறு வங்கிகள் அமைக்க 10 நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி..!</em></strong>சிறு வங்கிகள் அமைக்க 10 நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி..!

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

<strong><em>எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்..! விஜய் மல்லையாவின் புலம்பல்..!</em></strong>எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்..! விஜய் மல்லையாவின் புலம்பல்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bharti Airtel's payments bank venture — Airtel M Commerce Services Ltd. — has become the first entity to receive final approval from the Reserve Bank of India (RBI) to start a payments bank.
Story first published: Tuesday, April 12, 2016, 11:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X