சென்னை: வீடுகளில், கோவில்களில் முடங்கியுள்ள தங்கத்தை மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் நாட்டில் தங்க இறக்குமதியை அதிகளவில் குறைக்க முடியும் என்று பிரதமர் வழிகாட்டுதலின் பெயரில் மத்திய அரசு அறிவிக்கப்பட்ட 3 தங்க வைப்பு நிதி திட்டம் மக்கள் வரும்பவில்லை என்றும், இத்திட்டம் தோல்வி அடைந்ததாகச் சந்தையில் கருத்து நிலவுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம் மோடி அறிவித்த தங்க வைப்பு நிதி திட்டத்தில் 1,311 கிலோ தங்கத்தை டெப்பாசிட் செய்வதாக அறிவித்துள்ளது.
1,311 கிலோ தங்கம்
உலகிலேயே பெரும் பணக்கார கடவுளாகக் கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கப்படும் தங்கத்தின் அளவு பல டன்கள் இருக்கும்.
இதுவரை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா போன்ற முக்கியப் பொதுத்துறை வங்கிகளில் வைக்கப்பட்ட தங்கத்தை முதல் முறையாக மோடி அறிவித்த தங்க வைப்பு நிதி திட்டத்தில் டெப்பாசிட் செய்யத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
பஞ்சாம் நேஷ்னல் பாங்க்
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தபடி 1,311 கிலோ 0.995 தூய தங்கத்தைப் பஞ்சாம் நேஷ்னல் பாங்கில் பிரதமர் மோடி அறிவித்த தங்க நாணயமாக்கல் திட்டத்தில் வைப்பு வைக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம்
3 வருட காலம் வைக்கப்பட்டுள்ள இந்தத் தங்க வைப்புத் திட்டத்திற்குப் பஞ்சாம் நேஷ்னல் பாங்க் அதிகப்படியாக 1.75 சதவீக வட்டி அளிக்கப்படுவதால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இவ்வங்கியைத் தேர்ந்தெடுத்தது என TTD அமைப்பின் நிர்வாகத் தலைவர் சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி
பஞ்சாம் நேஷ்னல் பாங்கில் வைப்பு வைக்கப்பட்ட 1,311 கிலோ தங்கம் குறித்துத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
வருவாய்
நடப்பு நிதியாண்டில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சுமார் 2,600 கோடி ரூபாய் வரையிலான வருமான பெறும் எனச் சாம்பசிவ ராவ் தெரிவித்தார். இதில் 1,000 கோடி ரூபாய் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் உண்டியல் மூலம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதர வருமானம்
இதில் 800 கோடி ரூபாய் வட்டி வருமானமாகும், டிக்கெட் மற்றும் பிரசாதம் விற்பனையின் மூலம் 600 கோடி ரூபாயும், பக்தர்களின் தலை முடியின் மூலம் 140 கோடி ரூபாய் அளவிலான வருமான கிடைக்கும் என TTD அமைப்பு தெரிவித்துள்ளது.
சம்பளம்
இந்நிலையில் மொத்த வருமானத்தில் 500 கோடி ரூபாய் ஊழியர்களின் சம்பளமாக அளிக்கப்பட உள்ளது எனவும் TTD அமைப்பு தெரிவித்துள்ளது.
மோடி தோல்வியா..?
அசத்தலான 9 திட்டம்
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?



Click it and Unblock the Notifications