பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மோசடியாக 12,800 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெற்றுத் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக்க அறிவிக்கப்பட்டுள்ள வைர வியாபாரிக்கு உதவியதாகப் பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியா உஷா ஆன்ந்த சுப்ரமணியன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உஷா ஆனந்த சுப்ரமணியன் தற்போது அலகாபாத் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இவர் 2015 ஆகஸ்ட் முதல் மே 2017 வரை தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.
நீரவ் மோடியுடன் பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரிகளான பிரம்மகி ராவ் மற்றும் சஞ்சீவ் ஷரன் மீது சிபிஐ குற்ற அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி பங்கு சந்தைக்குத் தாக்கல் செய்த அறிக்கையில் 8,000 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக அறிவித்துவிட்டுச் சிபிஐயிடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்து இந்த வழக்கு விசாரணையின் போது பல வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள் வெளியில் வர பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் பெரும் அளவில் சரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டும் இல்லாமல் நீரவ் மோடியின் வாடிக்கையாளர்கள் வீடுகளை சோதனை செய்யும் நடவடிக்கையிலும் அமலாக்க துறை ஈடுபட்டு வருகிறது.