தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பினை அரசு வெளியிட்டுள்ளது. உங்களுக்கு தொடர்ந்து ரேஷனில் இலவச அரிசி மற்றும் மானிய விலை பொருட்கள் கிடைக்க வேண்டும் என்றால் இதனை கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை (19.09.2026 ) eKYC சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013இன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கேஒய்சி முடிப்பது கட்டாயம். அதாவது இந்த ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக கை விரல் ரேகை அடிப்படையிலான eKYC மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன் படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேஒய்சி பணிகள் கடந்த 2023 அக்டோபர் முதல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.48 சதவீத கேஒய்சி பணி முடிந்துள்ளது. இதனை 100% நிறைவு செய்யும் பொருட்டு நாளை தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
இடைதேர்தல் நடைபெறவுிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை தவிர்த்து, மாநிலத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, தற்போது வரை, நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகை பதிவவின் மூலம் கேஒய்சி செயயாமல் விடுபட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் நாளை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி கேஒய்சி பதிவினை முடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கேஒய்சி செய்ய தவறினால் அடுத்த மாதம் முதல் ரேஷனில் இலவச அரிசி உள்ளிட்டவை கிடைக்காமல் போகலாம். எனவே இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவா்கள் உடனே தங்கள் கடைக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.
முதலில் உங்களின் ரேஷன் கடைக்கு சென்று கேஒய்சி நிலுவையில் இருக்கிறதா என்பதை கேட்டு கொள்ளுங்கள். உங்கள் குடும்ப அட்டையில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர அனைத்து உறுப்பினர்களுமே கேஒய்சி செய்ய வேண்டும். எனவே யார் யாரெல்லாம் வந்து கேஒய்சி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அப்படி நிலுவையில் இருந்தால் உடனே அனைவரும் சென்று நாளை முகாமில் கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ளுங்கள். இதனை தவிர்த்தால் பின்னாளில் ரேஷன் கார்டே கூட ரத்தாக நேரிடலாம். ரேஷனில் கிடைக்கும் இலவச மற்றும் மானிய விலை பொருட்கள் கிடைக்காமல் போகலாம்.


Click it and Unblock the Notifications


