இறக்குமதி வரியை உயர்த்துவதன் முலம் 4,830 கோடி ரூபாயை ஈட்ட முடியும்: நிதி அமைச்சகம்
டெல்லி: மத்திய அரசு சரிந்து கிடங்கும் ரூபாய் மதிப்பை மேலும் சரிய விடாமல் தடுக்கவும், நாட்டின் நிதிப்பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 விழுக்காட்டை விட அதிகரிக்க விடாமல் பாதுகாக்க தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை 10 சதவிதமாக உயர்த்தியுள்ளது.
"தங்கம் மற்றும் பிளாட்டினக் கட்டிகள் மீதான சுங்க வரி 8 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வெள்ளி கட்டிகள் மீதான சுங்க வரி 6 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது." என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு தெரிவிக்கிறது.
தங்கத்தாது, வெள்ளித்தாது போன்றவற்றின் மீதான வரியும் 7 முதல் 10 சதவிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. தற்போதைய இறக்குமதி அளவீடுகளின் படி இந்த வரி உயர்வின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 4,830 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சகம் தெரிவித்தது.
Share This Article
English summary
Govt raises duty on gold, silver; hopes to get Rs 4,830 cr
The government today increased import duty on gold, silver and platinum to 10 per cent.
Story first published: Wednesday, August 14, 2013, 17:56 [IST]
See More On: gold, silver, platinum, tax, import tax, import, தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வரி, இறக்குமதி வரி, இறக்குமதி