Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
For Daily Alerts
இந்தியாவில் தங்கத்திற்கு இருக்கும் தேவையை மனதில் கொண்டு, தங்கத்திற்கு வழங்கப்படும் லோனுக்கு இந்திய ரிசர்வ் வங்கி புதிய தடைகளை விதித்திருக்கிறது. அதற்கான உத்தரவை, தங்கத்தின் மீது லோன் வழங்கும் வங்கிகளுக்கும் மற்றும் NBFCகளுக்கும் அளித்திருக்கிறது. இந்த புதிய உத்தரவு தங்க இடிஎஃப்(ETF) மற்றும் மீச்சுவல் பண்டுகளுக்கும் பொருந்தும்.
இந்த உத்தரவில் பேரில் இந்திய ரிசர்வ் வங்கி கூறும் போது, "வங்கிகளோ அல்லது NBFCகளோ தங்கத்திற்கு லோன் வழங்கும் போது, 50 கிராம் தங்கத்திற்கு அதிகமாக லோன் வழங்கக்கூடாது. மேலும் அந்த 50 கிராம் தங்க நகைகள், அல்லது நாணயங்கள் ஆகியவற்றிற்கு அனுமதிக்கப்பட்டத் தொகைக்கு அதிகமாக கடனை வழங்கக்கூடாது" என்று உத்தரவிட்டிருக்கிறது.
ஆனால் வங்கிகள் விற்கும் தங்க நாணயங்களுக்கு லோன் வழங்கும் போது மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கோல்டு எக்சேஞ்ச் ட்ரேடட் பன்ட்ஸ் (இடிஎஃப்) மற்றும் கோல்டு மீச்சுவல் பண்டுகள் போன்றவற்றிற்கு வங்கிகள் முன்பணம் கொடுக்க முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary