மத்திய அரசு 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி அளவை 175 ஜிகாவாட் அளவிற்குஉயர்த்த வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 2020ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அளவிலான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைத்தயாரிக்க ஜப்பான் நாட்டின் முன்னணி முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க் 1 டிரில்லியன் டாலர் அளவிலானமுதலீட்டைச் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்நிறுவனம் விதித்துள்ள கண்டிஷன்களைப் பார்த்தால் மத்திய அரசு இந்த முதலீட்டை வேண்டாம் எனக்கூறிவிடும் அளவிற்கு உள்ளது.
மசயோஷி சன்
2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலரை இந்திய மின்சார உற்பத்தித் துறையில் முதலீடு செய்யும் திட்டம் குறித்து மசயோஷி சன் சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார், இதைத் தொடர்ந்து முதலீடு மற்றும்வர்த்தகம் குறித்து மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மற்றும் இதர அரசு தலைவர்களிடம் விளக்கினார்.
அதிக முதலீடு
மத்திய அரசு 2022ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கத் திட்டத்திற்குத் தேவைப்படும் 89.88 பில்லியன் டாலர் முதலீட்டை விடவும் அதிகமான 1 டிரில்லியன் டாலர் முதலீட்டை சாப்ட்பேங்க் செய்கிறது.
ஆக ஒரு மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கத் தேவைப்படும் தொகை 6 கோடி ரூபாய்.
கூட்டணி
2015ஆம் ஆண்டில் சாப்ட்பேங்க், பாக்ஸ்கான் டெக்னாலஜி, பார்தி எண்டர்பிரைசர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 20 பில்லியன் டாலர் முதலீட்டில் 20 ஜிகாவாட் அளவிலான மின்சாரத்தைத் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியது.
கண்டிஷன்
இந்நிலையில் சாப்ட்பேங்க் தற்போது முதலீடு செய்ய உள்ள மின்சாரத் திட்டத்தின் மீதான 1 டிரில்லியன் டாலர்முதலீட்டில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை மத்திய அரசு டாலர் மதிப்பில் தான் வேண்டும் எனத் திட்டவட்டமாகக்கூறுகிறது.
உத்திரவாதம்
அதேபோல் இத்திட்டத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை மத்திய அரசு கண்டிப்பாக வாங்கும் என்ற உத்திரவாதத்தைஅளிக்க வேண்டும் என்றும் மசயோஷி சன் தலைமையிலான சாப்ட்பேங்க் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரச்சனை
மின்சாரம் கொள்முதல் குறித்து மத்திய உறுதி அளிப்பத்தில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை, ஆனால் மின்சாரத்தைடாலர் மதிப்பில் வாங்குவது என்பது தான் முடியாது.
ரூபாய் மதிப்பு மட்டுமே
இந்திய அரசின் மின்சாரக் கொள்முதல் சட்டத்திடத்தில் (power purchase agreements (PPAs)) ரூபாய் மதிப்பில் மட்டுமே வாங்கவேண்டும் என்று இருக்கும் நிலையில் டாலரில் வாங்குவது முடியாது.
வரலாறு..
அதேபோன்ற கோரிக்கையுடன் 80களில் சீனா லைன் & பவர் அமைப்பிற்கு 25 வருட காலத்திற்கு 3 சென்ட் தொகையில்மின்சாரத்தை அளிக்கச் சாப்ட்பேங்க் ஒப்பந்தம் செய்தது. அப்போதைய காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரானஇந்திய ரூபாயின் மதிப்பு 32 ரூபாய், தற்போது இதன் மதிப்பு 67 ரூபாய்.
இதில் லாபம் சாப்ட்பேங்க் நிறுவனத்திற்குத் தான்.
நிராகரிப்பு
இந்நிலையில் மோடி அரசு இந்த முதலீட்டை ஈர்த்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் எனத் திட்மிட்டால்கண்டிப்பாகச் சட்டதிட்டத்தை மாற்ற வேண்டும். இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும், ஏற்கனவே மோடி அரசுமிகவும் மோசமான நிலையில் இருக்கும் போது சட்டதிட்டத்தை மாற்றுவதன் மூலம் கூடுதல் வெறுப்பைப் பெறவிரும்பாது.
இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு சாப்ட்பேங்க் நிறுவனத்தின் 1 டிரில்லியன் டாலர் முதலீட்டை நிராகரிப்புசெய்வதைத் தவிர வேறு வழி இல்லை.
மசயோஷி சன்
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications