இந்தியா முழுவதும் தந்தேரஸ் அல்லது தந்த்ரயோதசி பண்டிகை வருகிற அக்டோபர் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை என்பது செல்வத்தின் கடவுளான குபேரன் மற்றும் லக்ஷ்மி-யை வணங்குவதற்காகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.
இந்த நாளில் மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் பாத்திரங்களை வாங்குவதன் மூலம் தங்களது செல்வமும் பெருகும் என நம்புகின்றனர், இதனாலேயே இப்பண்டிகை காலத்தில் தங்கம், வெள்ளிக்கு அதிகப்படியான டிமாண்ட் உருவாகிறது.
இந்தியாவில் தங்கம் மீதான வரி அதிகமாக இருக்கும் நிலையில் பலர் வரி இல்லாமல் தங்கம் விற்பனை செய்யப்படும் துபாயில் இருந்து அதிகமாக வாங்கத் திட்டமிடுகின்றனர்.
அப்படி நீங்க துபாயில் இருந்து தங்கத்தை வாங்க திட்டமிட்டால் முதலில் இதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
தந்தேரஸ் பண்டிகை
தந்தேரஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பெண்கள், ஆண்கள் மட்டும் அல்லாமல் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்குத் தங்கத்தைக் கிப்ட் ஆகக் கொடுக்கத் திட்டமிட்டு அதிகளவில் தங்கம் வாங்க முடிவு செய்துள்ளனர். இதில் பலர் துபாயில் இருந்து தங்கத்தை வாங்க முடிவு செய்துள்ளனர்.
துபாய்
துபாயில் தங்கத்தை வாங்கி இந்தியாவில் விற்பனை செய்து அவ்வளவு எளிதாக லாபம் பார்க்க முடியாது. பல விதிமுறை சிக்கல், வரி விதிப்பு ஆகியவை அதிகமாக உள்ளது. இதனால் துபாயில் இருந்து தங்கம் வாங்கும் முன் விஷயத்தை முழுமையாகத் தெரிந்துகொண்டு வாங்குங்கள். இல்லையெனில் தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.
6 மாதம்
இந்திய பாஸ்போர்ட் கொண்டவர்கள் அல்லது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் துபாயில் இருந்து வந்து இந்தியாவில் 6 மாதத்திற்கு அதிகமாகத் தங்கினால், கொண்டு வரப்படும் தங்கத்திற்கு வரிச் சலுகை விகிதம் 12.5% + சமூக நல கூடுதல் கட்டணம் 1.25% விதிக்கப்பட்டும்.
1 கிலோ தங்கம்
பிற காரணிகளில் அதாவது குறுகிய காலகட்டத்திற்கு இந்தியா வரும் போது தங்கம் வாங்கி வந்தால் 38.5 சதவீதம் சுங்க வரி செலுத்த வேண்டியது கட்டாயம். இதேபோல் ஒருவர் 1 கிலோவிற்கு அதிகமாகத் தங்கம் கொண்டு வரக்கூடாது.
ஒரு வழி
இந்த வரி விதிப்பில் இருந்து தப்புவதற்கு வழிகளும் உண்டு. அதாவது துபாயில் இருந்து வரிக்கு உட்பட்ட அளவில் மட்டும் தங்கத்தைக் கொண்டு வந்தால் வரி விதிக்கப்பட மாட்டாது. ஒரு வருடத்திற்கும் அதிகமாக வெளிநாட்டில் வசித்து வருபவர் 20 கிராம் தங்கம் வரையில் கொண்டு வரலாம், இதன் மதிப்பு 50000 ரூபாய்க்கு மேல் தாண்ட கூடாது. இதுவே பெண் பயணியாக இருந்தால் 40 கிராம் தங்க நகைகளை வரி இல்லாமல் கொண்டு வரலாம், ஆனால் இதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய் அளவீட்டை தாண்டக் கூடாது.
More From GoodReturns

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!



Click it and Unblock the Notifications