
(Top 5 gold saving schemes from reputed jewellers)
அரசுத் திட்டங்கள்:
மத்திய அரசு அதற்காக பலவிதமான திட்டங்களை வரையறுத்திருக்கிறது. குறிப்பாக அஞ்சலகம் வழங்கும் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், மாதா மாதம் ஒரு குறிப்பிட்டத் தொகையை வருமானமாகப் பெறலாம். குறிப்பாக அஞ்சலகத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு முழுமையான பாதுகாப்புக் கிடைக்கும். அதனால் எந்தவித பயமுமின்றி இத்தகைய அஞ்சலகத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டங்களில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும். அதன் மூலம் மாதம் ஒரு குறிப்பிட்டத் தொகையை வருமானமாகப் பெறலாம். உதாரணமாக, நீங்கள் ரூ.4.5 லட்சம் முதலீடு செய்தால் உங்களுக்கு மாதம் ரூ.3000 வருமானம் கிடைக்கும். மேலும் வருமான வரி சட்டம் 80சி பிரிவின் படி இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ரூ.1லட்சம் வரை வரி சலுகை பெற முடியும். நீங்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி அதன் திட்டங்களை அறிந்து உடனே அந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
வங்கி வழங்கும் சேமிப்புத் திட்டங்கள்:
வங்கிகள் மாத வருமான முதலீட்டுத் திட்டங்களை வழங்கி வருகின்றன. வங்கிகளில் முதலீடு செய்வதும் மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும். வங்கிகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு 6 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. ஆனால் இந்த வட்டி விகிதம், வட்டி விகிதத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும். அதுபோல் வங்கிகள் விருப்பத்திற்கு ஏற்ப வட்டி விகிதத்தை முடிவு செய்கின்றன.
நிதி திட்டங்கள்:
பல மீச்சுவல் பண்டுகள் முதலீட்டாளர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட வருமானத்தை வழங்குகின்றன. ஆனால் இந்த மீச்சுவல் பண்டுகளில் செய்யப்படும் முதலீடுகள், வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் செய்யப்படும் முதலீடுகளைவிட சற்று பாதுகாப்பு அற்றது. ஏனெனில் மீச்சுவல் பண்டுகள், நீங்கள் செய்யும் முதலீடுகளில் ஒரு பகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன.
இந்த பண்டுகளின் பெரும் பகுதி முதலீடுகள் அரசு மற்றும் கார்பரேட் பாண்டுகளுகளுக்குச் செல்கின்றன. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையி்ல் முதலீடு செய்வதில் உள்ள ஆபத்துகள் தெரியப்படுத்தப்படாமல் இருக்கின்றன. மேலும் இந்த பண்டுகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஆனால் டிவிடன்ட்டாக அளிக்கப்படுகின்றன. சந்தைக்குத் தகுந்தவாறு, பண்டுகளில் முதலீடு செய்யப்படுவதிலிருந்து கிடைக்கும் வருமானம் மாறிக் கொண்டிருக்கும். பொதுவாக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வருமானம் கிடைக்கும்.
நாம் பெறும் வழக்கமான மாத வருமானத்திலிருந்து இன்னும் கூடுதலாக வேறொரு வழியில் வருமானம் வந்தால் அது நமக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே முதலீட்டாளர்கள் தங்களுக்கு ஏற்ற திட்டத்தை ஆராய்ந்து முதலிடு செய்யவேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!



Click it and Unblock the Notifications