டெல்லி: நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களின் மொத்த முதலீட்டில் குஜராத் மாநிலம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. தமிழகம் 7-வது இடத்தில் இருக்கிறது.
தொழில்துறை அமைப்பான அசோசெம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
- 2012ஆம் ஆண்டு ஜுன் நிலவரப்படி, 20 மாநிலங்கள் ஈர்த்த முதலீட்டு அளவு வரிசையாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இப் பட்டியலில் அதிகபட்ச முதலீட்டை ஈர்த்து குஜராத் மாநிலம் முதல் மாநிலமாக திகழ்கிறது.
- நாடு முழுவதும் ரூ.140 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தனியார் துறையினர் மட்டும் ரூ.82.90 லட்சம் கோடி முதலீடு! குஜராத் மாநிலத்தில் மொத்தம் ரூ.14.80 லட்சம் கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தனியாரின் பங்கு 70%
-ஒடிஷா மாநிலம் ரூ.8.80 லட்சம் கோடி தனியார் முதலீட்டை ஈர்த்துள்ளது. இது, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த தனியார் துறை முதலீட்டில் 10.7% . குஜராத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் ரூ.11.80 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தனியாரின் பங்களிப்பு 75%.
- மகாராஷ்டிரா மாநிலம் 8.9% முதலீட்டை ஈர்த்து மூன்றாவது இடத்திலும், ஆந்திர மாநிலம் 8.4% முதலீட்டை பெற்று நான்காவது இடத்திலும் கர்நாடகா (7.2%) ஐந்தாவது இடத்திலும், ஜார்க்கண்ட் (7.1%) ஆறாவது இடத்திலும் 5.2% முதலீட்டை ஈர்த்து தமிழ்நாடு ஏழாவது இடத்திலும் உள்ளது.
- மேற்கு வங்காளம் (5%), அரியானா (4.8%), உத்தரபிரதேசம் (4.8%), மத்தியபிரதேசம் (4.6%) முதலீடு பெற்று எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது மற்றும் பதினோராவது இடங்களில் உள்ளன.