லண்டன்: இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நிறுவனத்திற்கு இடம் இல்லை என மக்கள் போராட்டம் செய்து வரும் நிலையில், இந்தியாவின் டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டிரென்டு நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சில்லறை வர்த்தக நிறுவனமான டெஸ்கோ நிறுவனம் இந்தியவில் சில்லரை வர்த்தகத்தை துவங்குவதாக அறிவித்துள்ளது.
இதற்காக டெஸ்கோ நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் 14 மில்லயன் டாலர் அதாவது 850 கோடி ரூபாய் இந்திய சந்தைகளில் முதலீடு செய்யதுள்ளனர். இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தின் மதிப்பு 500 பில்லயன் மதிப்புடையது.
கூட்டணி
இந்த இரண்டு நிறுவனங்களும் தளா 50:50 என்ற சரி பாதி முதலீட்டுடன் இந்தியாவில் டிரென்ட் ஹைபர் மார்க்கெட் என்ற பெயரில் செயல்பட திட்டமிட்டுள்ளது.
எதிர்புகள்
இந்தியாவில் சில்லரை வர்த்தகத்திற்கு சுமார் 51 சதவீதம் அன்னிய முதலீடு செய்ய கடந்த 2012ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு இந்தியாவில் பல எதிர்ப்புகள் வெளி வந்தது.
டெஸ்கோ நிறுவனம்
இத்தனை எதிர்புகளையும் மீறி இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தில் களமிறங்கும் முதல் இந்திய நிறுவனம் டெஸ்கோ என்பது குறிப்பிடதக்கது.
பிற நிறுவனங்கள்
வெளிநாட்டு முதலீட்டு விதிமுறைகளில் உள்ள தெளிவற்ற தன்மையால் சுவீடன் நாட்டை சேர்ந்த ஐகியா, அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட், ஜெர்மனியைச் சேர்ந்த மெட்ரோ குரூப் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களால் இன்னும் இந்தியாவில் கால் பதிக்க முடியவில்லை.
12 கடைகள்
டெஸ்கோ மற்றும் டிரென்ட் இடையிலான ஒப்பந்தம் பூர்த்தியானதும் டிரென்ட் ஹைபர் மார்க்கெட்டின் 12 அங்காடிகள் இந்தியாவில் செயல்படும்.


Click it and Unblock the Notifications