மும்பை: குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட அதானி குழுமத்தின் அதானி சகோதரர்கள் மீது இருந்த மோசடி மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் குஜராத் நிதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததுள்ளது.
பங்குகள் வாங்குதல் மற்றும் விற்றலில் முறைகேடு செய்துருப்பதாக அதானி சகோதரர்கள் மற்றும் 12 பேர் மீதும், அதானி எக்ஸ்போட்ஸ் லிமிடெட் மற்றும் அதானி அகிரோ பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் மீது 2012ஆம் ஆண்டு தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (SFIO) வழக்கு பதிவு செய்தது.
தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம்
இந்த அமைப்பு அளித்த தகவலின் படி, அதானி அக்ரோ நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான முறையில் கேட்டன் பராக் நிறுவனத்திற்கு, அதானி நிறுவன பங்குகளை தவறாக பயன்படுத்த அளித்தாக தெரிவிக்கிறது.
லாபம்
கேட்டன் பராக் நிறுவனம் நிறுவன பங்குகளை, பங்கு சந்தை உயர்வாக இருக்கும்போது விற்கவும், பங்கு சரிவில் இருக்கும் போது திரும்ப வாங்கவும் செய்தது. இதனால் இரு நிறுவனங்களும் அதிகப்படியான லாபத்தை முறைகேடான முறையில் பெற்றது.
அதானி
இந்த வழக்கில் இருந்து அதானி குழுமம் கடந்த மே 9ஆம் தேதி அன்றே வடுவிக்கப்பட்டனர். ஆனால் அதற்கான விடுதலை ஆணை கடந்த வாரம் இறுதியில் தான் கிடைத்தது. மேலும் அதானி சகோதரர்களான கெளதம் அதானி மற்றும் ராஜேஷ் அதானி இருவரும் பாரத பிரதமரான நரேந்திர மோடியின் நெருங்கிய நன்பர்களாவர்.
நிதிமன்றம்
இவ்வழக்கை விசாரித்த நிதிமன்றம் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகத்தை போதி சட்சிகளை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டதுள்ளது. மேலும் பொது மக்கள் யாரிடம் இருந்து இந்நிறுவனத்திற்கோ அல்லது அதானி சகோதரர்களுக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று நிதிமன்றம் தெரவித்தது.