டெல்லி: கருப்பு பணத்தை, வெள்ளையாக மாற்ற புல்லியன் சந்தை சிறப்பாக பயன்படுகிறது என கருப்பு பணத்தை ஒழிக்கும் மத்திய அமைச்சகத்தின் சிறப்பு குழு வெளியிட்ட பல அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
இச்செய்தியை உண்மையாக்கும் விதமாக 2014ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு, சுமார் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை ஏற்றுமதி செய்துள்ளது. மேலும் கடந்த அக்டோபர் மாதம் (இந்தியாவில் தங்க இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நேரம்) மட்டும் சுவிஸ் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு சுமார் 2.8 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை ஏற்றுமதி செய்துள்ளது, அது கடந்த வருடம் 2.2 பில்லியன் டாலராக இருந்தது.
1 டிரில்லியன் டாலர்
2014ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் 14.2 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை சுவிஸ் நாட்டில் இருந்து இறக்குமதிப்பு செய்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பின் படி 93,000 கோடி ரூபாய் ஆகும்.
கருப்பு பணம்
இத்தகைய பரிமாற்றம் கருப்பு பணத்தை வெண்மையாக்கும் திட்டமா என மத்திய அரசு சந்தேகிக்கிறது. இது குறித்து கேள்விகளை மத்திய அரசு சுவிஸ் நாட்டின் அதிகாரிகளை கேட்டுள்ளது. ஆனால் இதுவரை சுவிஸ் அரசு எந்தவிதமான பதில்களையும் கேட்டுள்ளது.
70 சதவீதம் தங்கம்
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தங்க இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையிலும், தங்க இறக்குமதி செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 28 சதவீதம் அதிகமாக இருந்தது. கடந்த 5 மாதங்களில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தில் 70 சதவீதம் சுவிஸ் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
உலக நாடுகளின் அழுத்தம்
சுவிஸ் நாட்டில் அதிகாளவில் கருப்பு பணம் புழங்குவதால், உலக நாடுகள் இந்நாட்டை இக்கட்டான சூழ்நிலைக்கு உட்படுத்தி வருகிறது. இதனால் சுவிஸ் நாட்டின் வர்த்தக அறிக்கையை ஆண்டுதோறும் வெளிட்டு வருகிறது. இம்மாத முடிவில் இதற்கான அறிக்கையை வெளியிடும் என தெரிகிறது.
வர்த்தக தகவல்கள்
மேலும் இந்தியாவில் தங்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான 2013ஆம் ஆண்டின் தகவல்கள் மட்டுமே உள்ளது, 2014ஆம் ஆண்டின் முழுமையான தகவல்கள் இன்னும் திரட்டப்படவில்லை.
வர்த்தக அறிக்கை
மேலும் இந்தியா மற்றும் சுவிஸ் நாட்டின் வர்த்தக அறிக்கையை ஒப்பிடும்போது உண்மையான நிலையும், மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவுகளை உறுதி செய்ய முடியும்.
கருப்பு பணம்
மேலும் சமீபத்தில் சுவிஸ் வங்கி வெளியிட்ட தகவலின் படி 2013ஆம் ஆண்டின் இறுதியில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் சுமார் 14,000 கோடி ரூபாய் உள்ளதாக தெரிவித்துள்ளது. இது 2012ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 42 சதவீதம் அதிகமாகும்.
More From GoodReturns

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!



Click it and Unblock the Notifications