டெல்லி: இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடந்த வாரம், பல வருடங்களாகக் கிடப்பில் கிடந்த முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பு 25,000 கோடி ரூபாயாகும்.
டாடா-ஏர்பஸ் கூட்டணி
இதில் டாடா-ஏர்பஸ் கூட்டணி நிறுவனத்திடம் இருந்து 11,929 கோடி ரூபாய் மதிப்புள்ள 56 போக்குவரத்து விமானங்கள் வாங்கும் திட்டத்திற்கு இந்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
பிற திட்டங்கள்
மேலும் 2,900 கோடி ரூபாய் மதிப்புள்ள 145 அமெரிக்க எம்-777 அல்ட்ராலைட் ஹவிசர்ஸ் மற்றும் 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 ரஷ்ய கமாவ் ஹெலிக்காப்டர் வாங்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
ஏர் இந்தியா
மேலும் பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் பிரானாப் முகர்ஜி முழுமையாகப் பயன்படுத்த ஏர் இந்தியாவின் 2 போயிங் 777-300 விமானங்களைக் கையகப்படுத்தவும் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ஏர் போர்ஸ் ஒன்
மேலும் இந்த இரு விமானங்களும் இனி இந்திய ஏர் போர்ஸ் ஒன் ஆகச் செயல்படும்.
ஏர் போர்ஸ் ஒன் என்பது அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் தனி விமானத்தின் பெயர்.