டெல்லி: மத்திய அரசின் அன்னிய முதலீட்டுக்கான உயர்மட்ட குழு, பாதுகாப்பு மற்றும் வெடிபொருட்கள் துறை சார்ந்த 32 அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு முதற்கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இதில் அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்தின் 8 திட்டங்கள் அடக்கம்.
இந்த 33 பரிந்துரைகளையும் மத்திய அரசு நவம்பர் 6ஆம் தேதி நடக்க உள்ள முக்கியக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை முதற்கட்ட ஒப்புதல் அளித்துள்ள 33 திட்டங்களில் பாதுகாப்புத் துறையில் 25 திட்டங்கள், வெடிபொருட்கள் தயாரிப்புத் துறையில் 7 திட்டங்களும், நுகர்வோர் துறையில் 1 திட்டங்களுமாக உள்ளது.
பாதுகாப்புத் துறையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள 11 திட்டங்களில் 8 திட்டங்கள் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்துடையது. இதில் ரிலையன்ஸ் டிபென்ஸ் டெக்னாலஜிஸ், ரிலையன் ஹெலிக்காப்டர், ரிலையன்ஸ் ப்ரோபல்ஷன் சிஸ்டம்ஸ், ரிலையன்ஸ் ஏரோ ஸ்டக்சர் மற்றும் ரிலையன்ஸ் நேவல் சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களுடையது.
இந்தியா பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீட்டை அதிகளவில் ஈர்க்க 49 சதவீதம் வரை ஆட்டோமேட்டிங் முறையில் முதலீட்டை ஈர்க்க அனுமதி அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications