எஸ்ஐபி-ல் எப்படி முதலீடு செய்வது? நேரடி பங்குகள் மூலமா அல்லது மியூசுவல் ஃபண்ட் மூலமா?

பங்கு முதலீடுகளை இருவகையாகப் பிரிக்கலாம். நேரடி முதலீடு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செய்யப்படும் முதலீடு. மேலும் அதை மொத்தமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட முதலீட்டுச் செயல்முறை மூலம் (எஸ்ஐபி) ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையாக முதலீடு செய்யலாம்.

எஸ்ஐபி - நேரடி அல்லது மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு

எஸ்ஐபி - நேரடி அல்லது மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு

ஒவ்வொரு மாதமும் முறையாகச் சிறிய தொகை ஒன்றைப் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். மற்றவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்பவர்களும் இருக்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்வதினால் என்ன லாபம்?

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்வதினால் என்ன லாபம்?

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்குச் சில சாதகப் பாதகங்கள் உள்ளன. உதாரணமாக, இதில் பல்வேறு செலவினங்கள் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ அவர்கள் ஏற்கவேண்டியிருக்கும். மேலாண்மை கட்டணம், துவக்கச் செலவுகள், முடிவுச் செலவுகள் ஆகிய வருவாயைக் குறைக்கும் செலவினங்கள் இதில் அடக்கம்.

நேரடி முதலீட்டாளராக இருந்தால் என்ன பயன்?

நேரடி முதலீட்டாளராக இருந்தால் என்ன பயன்?

மற்றொருபுறம், நேரடியாகச் செய்பவர்களுக்கு, இந்தச் செலவுகள் இல்லை. எனினும், இதில் பல சாதக அம்சங்கள் உள்ளன. இதில் முக்கியமானது உங்களுக்குக் கிடைக்கும் தொழில் வல்லுனர்களின் உதவி.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய உதவி எப்படிக் கிடைக்கும்?

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய உதவி எப்படிக் கிடைக்கும்?

ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் பங்குச்சந்தை ஆராய்ச்சி வல்லுனர்கள் குழு ஒன்றையும், நிதி மேலாளர் ஒருவரையும் கொண்டு உங்களுக்குத் திறம்பட முதலீடு செய்ய உதவுகின்றன. இந்த வாய்ப்பு நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஒருவேளை தனி நபர் முதலீட்டாளர்களுக்கு இது பற்றிய தேர்ந்த அறிவு இருந்தால் அவர் இதைச் செய்யலாம்.

எதனால் எஸ்ஐபி திட்டம் மூலமாக முதலீடு செய்ய வேண்டும்?

எதனால் எஸ்ஐபி திட்டம் மூலமாக முதலீடு செய்ய வேண்டும்?

தொடர்ச்சியாகக் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யும்போது அதனைக் கவனிக்கப் போதிய நேரமும் தேவைப்படும். ஒரு தனி நபருக்கு அந்த வாய்ப்பு இருந்தால் அது பரவாயில்லை. இல்லையென்றால் அவர் எஸ்ஐபி திட்டத்தை மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் செய்யலாம். இந்த நிதி மேலாளர்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள் அடிப்படையான, நுணுக்கமான மற்றும் துறைசார்ந்த அறிவினையும் பரந்த பொருளாதார அனுபவமும் பெற்றவை.

அதிக லாபம்

அதிக லாபம்

இது அவர்கள் அபாயத்தைத் துல்லியமாகக் கணித்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்க உதவுகிறது. கடந்த சில வருடங்களாக, பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை ஈட்டித் தந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இவை 11% வருவாயை ஈட்டித் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒரு புள்ளிவிவரம் ஆகும். உண்மையில் இவை தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தைகளின் கணிப்புகளை முறியடித்துள்ளன என்பதை மறுக்க இயலாது. இது இந்த நிறுவனங்கள் முதலீடுகளைக் கையாளுவதில் ஒரு நிரூபிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.

தனிநபராக முதலீடு செய்யலாமா?

தனிநபராக முதலீடு செய்யலாமா?

ஒருபுறம் அவ்வாறு இருந்தாலும், ஒரு தனி நபரால் பங்குகள் மற்றும் சந்தை அறிவைக் கொண்டு வருவாயை ஈட்டமுடியாது என்று பொருளல்ல. அவர் ஒரு சிறந்த வழிகாட்டுதல் மற்றும் சந்தை அறிவைக் கொண்டு வருவாய் ஈட்ட முடியும். எனினும் முன்னே கூறியதைப் போல இதற்கு நிறைய நேரம் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பிற்காக அவர் செலவிட வேண்டியிருக்கும்.

எப்போது எஸ்ஐபி மூலமாக நேரடியாக முதலீடு செய்யலாம்?

எப்போது எஸ்ஐபி மூலமாக நேரடியாக முதலீடு செய்யலாம்?

மொத்தத்தில் உங்களிடம் அனுபவம், திறமை மற்றும் நேரம் இருந்தால், நீங்கள் ஒரு எஸ்ஐபி மூலமாக நேரடியாக முதலீடு செய்யலாம் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் மூலம் அதனைச் செய்யலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+