ஏன் முதலீட்டு பங்குப்பட்டியலை மறு சமநிலைப்படுத்த வேண்டும்?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் முதலீட்டு பங்குப்பட்டியலை மறு சமநிலைப்படுத்த  வேண்டும்?
முதலீடு என்பது உங்களுடைய வருங்காலத்திற்கான சேமிப்பாகும். ஆனால் உங்களுடைய பேராசை மற்றும் பயம் ஆகிய இரண்டும் உங்களுடைய முதலீட்டை பாதிக்கும் மிக முக்கிய காரணிகள் என்பதை அறிவீர்களா?. நீங்கள் பங்கு சந்தைகளில் முதலீடு செய்தாலும் சரி அல்லது பிற வகையான தனிப்பட்ட முதலீடுகளில் ஈடுபட்டாலும் சரி. இந்த இரண்டு தாரக மந்திரத்தை மட்டும் மறந்து விடாதீர்கள், இதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இந்த கொள்கைகளை பின்பற்றி நீண்ட கால முதலீட்டாளர்கள் குறுகிய கால முதலீட்டாளர்களை விட அதிகம் லாபம் அடைந்தனர். உதாரணமாக திரு ராஜன் அவர்களின் வாழ்க்கை எடுத்துக் கொள்ளுங்கள். திரு ராஜன் ஒரு நிதி நிறுவனத்தில், மத்திய நிலை ஊழியராக பணியாற்றி வருகிறார். ஒரு வருடத்திற்கு முன், ராஜன் நிரந்தர வருமான பத்திரங்களில் ரூ40,000ம் மற்றும் பங்குகளில் ரூ50,000ம் முதலீடு செய்துள்ளார்.

அவருடைய பங்குகள் ஒட்டுமொத்தமாக நல்ல நிலையில் இருந்த பொழுது, சந்தைகளில் முதலீட்டாளர்கள் தங்களுடைய லாபத்தை வெளியே எடுக்க முனைந்ததால் பங்குச் சந்தை ஒரு சரிவை சந்தித்தது. அந்த நிலையில் அவருடைய ஒட்டு மொத்த லாபமும் கரைந்து போனது. ஒரு நீண்ட கால முதலீட்டாளர் என்ற வகையில் திரு ராஜன் தான் முதலீடு செய்திருந்த நிறுவனங்களின் மீது நம்பிக்கை வைத்து அதே பங்குப்பட்டியலை(portfolio) பராமரிக்க நினைத்தார். ஆனால் இப்போது அவர் உண்மையில் பங்குகளில் செய்யப்பட்ட முதலீட்டுப் பணத்தை இழக்கத் தொடங்கி விட்டார்.

அவர் சரியான நேரத்தில் அவரது பங்குப்பட்டியலை(portfolio) சமநிலைப் படுத்தியிருந்தால் இன்று நஷ்டத்தை சந்தித்திருக்க மாட்டார். உங்களை பங்குச் சந்தை ஏமாற்றங்களில் இருந்து பாதுகாக்க சில எளிய முதலீட்டு விதிகள் உள்ளன.

முதலில் பங்குப்பட்டியலை(portfolio) மற்றி அமைப்பது என்பது அதிக நிகர சொத்து மதிப்புடைய தனிநபர்கள் அல்லது நிறுவன முதலீட்டாளர்களால் மட்டுமே முடியும் என நினைக்காதீர்கள். மறு சமநிலைப்படுத்தல் என்பதை எந்த ஒரு முதலீட்டாளராலும் செய்ய முடியும். மிக எளிய மற்றும் தனிநபருக்கு பயன் தரக்கூடிய மறு சமப்படுத்தும் நுட்பங்கள் சில பின்வருமாறு:

பிசிக்கல் மறு சமநிலை(Physical Re-Balancing)

மறு சமநிலைப்படுத்துவது என்பதை ஒரு கொள்கை முடிவாக ஒரு வருடத்திற்கு ஒரு முறை என வைத்துக் கொள்ளலாம். ஆனால் எப்பொழுது எல்லாம் சந்தை தனது வாய்ப்புகளை முதலீட்டாளர்களூக்கு வழங்குகிறதோ அப்பொழுது எல்லாம் அதைப் பயன் படுத்த தவற வேண்டாம். அதற்காக குறிப்பிட்ட காலம் வரும் வரை காத்திருக்க வேண்டாம். அதாவது ஒரு முதலீட்டாளர் சந்தையின் போக்கிலேயே செல்ல வேண்டும் என்பதை இது குறிக்கிறது. உதாரணமாக திரு சுந்தர் அவர்களின் வழக்கை எடுத்துக் கொள்வோம். அவர் ரூ1 லட்சத்தை இரு பகுதிகளாக பிரித்து முதலீடு செய்துள்ளார். அதில் ரூ 50,000 பங்குகளிலும், மீதி ரூ50,000 பெருநிறுவன பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ளார்.

சுந்தர் அவர்களுக்கு அவருடைய பங்குப்பட்டியலை மறு சமன் செய்ய உள்ள முதல் வழி, ஒரு ஆண்டு காலம் வரை காத்திருந்து அந்த ஆண்டின் இறுதியில் அவருக்கு கிடைத்த வருமானத்தின் அடிப்படையில் மறு சமன்ப்படுத்துவது. இந்த வழக்கில், சந்தைகளின் கரடியின் பிடியில் இருந்து அவர் சுமார் ரூ40,000 பங்குகளிலும், ரூ60,000 பத்திரங்களிலும் முதலீடு செய்திருந்தால், பத்திர முதலீட்டில் ஒரு பகுதியை விற்று அந்த லாபத்தை பங்குகளில் முதலீடு செய்யலாம். ஏனெனில் பங்குகளின் விலை மலிவாக உள்ளது.

அதே நேரத்தில் சந்தை காளையின் பிடியில் இருந்து அவர் பங்குகளில் சுமார் ரூ57,000, பத்திரங்களில் சுமார் ரூ43,000 முதலீடு செய்திருந்தால், அவருடைய பங்குகளை விற்று அந்த லாபத்தை பத்திரங்களில் முதலீடு செய்யலாம். ஏனெனில் பங்குகளின் விலைகள் அதிகமாக உள்ளது. இந்த நடைமுறை தானியங்கு மறு சமநிலைப்படுத்துவது எனப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why you must re-balance your investment portfolio?

You might have heard greed and fear are the two critical elements in stock markets or investing per se. This is also true for long term investors though the discipline is much higher than short term profit seekers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X