சென்னை: பல சமயங்களில் இவை இரண்டும் ஒன்றுதான் என நாம் தவறாக புரிந்துகொண்டாலும் கூட, வட்டி விகிதம் மற்றும் ஈட்டம் இரண்டிற்குமிடையே லேசான வேறுபாடு உள்ளது. வட்டி விகிதத்தை விட ஈட்டம் உயர்வாக இருப்பதால், நிதி நிறுவனங்கள் மற்றும் கம்பனிகள் மென்மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ஈட்டத்தொகையை முன்னிலைப்படுத்தி காட்டுகின்றன. இந்த இரண்டு சொற்களுக்கும் இடையிலான நுணுக்கமான வேறுபாட்டை வாடிக்கையாளர்கள் பின்வரும் விளக்க கட்டுரையின் முலம் அறிந்து கொள்ள முடியும்.
வட்டி விகிதம்
நிலையான வைப்பு, தொடர் வைப்பு நிதி, வருங்கால வைப்பு நிதி போன்ற முதலீட்டுகளின் அசல் தொகையின் மீது, ஒரு குறிப்பிட்ட கால அடிப்படையில் கணக்கிடப்படும் வருமானத் தொகை வட்டி விகிதம் எனப்படும். எளிமையாக கூறினால், முதலீட்டுத் தொகையின் மீது கூடுதலாக கிடைக்கும் தொகையை சதவிகிதத்தில் குறிப்பிடுவது வட்டி விகிதமாகும். கடன் மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டிலும் இந்த கோட்பாடு உள்ளது.

வட்டி விகிதம் என்பது ஒரு முதலீட்டிலிருந்து பெறக்கூடிய வருமானம் ஆகும், இதில் வேறு காரணிகளை கருத்தில் கொள்ளபட மாட்டாது. உதாரணமாக, 4% வட்டி விகிதத்துடனான ஒரு மாற்றத்தக்க கடனீட்டு பத்திரத்திலிருந்து, ஆரம்ப முதலீட்டுத் தொகையை விட மேலதிகமாக 4% வருமானம் கிடைக்கும். அதேபோல், 11% ஆண்டு வட்டி விகிதத்தில் கடன் பெற்றிருந்தால், கடன் தொகைக்கு மேலாக 11% வட்டித் தொகையாக செலுத்த வேண்டும். பொதுவாக பொருளாதார கட்டமைப்பு அல்லது கடன் வழங்கும் விகிதம் ஆகியவற்றை தெளிவுபடுத்திக் காட்டுவதற்காக வட்டி விகிதம் பயன்படுத்தப்படுகிறது.
ஈட்டம்
வரி அனுகூலங்கள் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு, ஒரு முதலீட்டிலிருந்து கிடைக்ககூடிய வருமானத் தொகை ஈட்டம் எனப்படும். ஒரு முதலீட்டிலிருந்து பெறக்கூடிய ஒரு துல்லியமான ஆதாயத் தொகை ஈட்டமாகும், இது சதவிகிதத்திலோ (%) அல்லது நாணய முறையிலோ குறிப்பிடப்படும். வட்டித் தொகைகளை கூட்டுவதின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட முதலீட்டுத்திட்டத்திலிருந்து கிடைக்ககூடிய ஈட்டம் அதிகரிக்கிறது. ஆகவே, ஒரு வருடகாலத்திற்கு 4% வட்டி விகித்துடான ஒரு முதலீட்டு திட்டம் ரூ.400 ஈட்டத்கொகையைக் கொடுக்கும்.

உதாரணமாக: ஒரு வங்கியில் வைப்பு வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை சேர்க்கப்படுகிறது. ஆகவே, ஆண்டு வட்டி விகிதம் 10% காலாண்டுக்கொருமுறை உங்களுக்குக் கிடைத்தால், மூன்று மாதங்களுக்குப் பின்னர் வங்கி வட்டித்தொகையை உங்கள் ஆரம்ப முதலீட்டில் சேர்க்கும் போது உங்கள் ஈட்டம் உயரும். ஆகவே, நான்காவது மாததிலிருந்து ஆரம்ப முதலீட்டுத்தொகை மீது 10% ஆண்டு வட்டி கணக்கிடப்படுவதால், இந்த வட்டி உங்கள் ஈட்டத்தை மேலும் அதிகமாக்கும். இந்த அடிப்படையில் பார்க்கையில் வட்டிவிகிதத்தை விட ஈட்டம் எப்போதும் உயர்வாக இருக்கும்.
எனவே, இந்த இரண்டுக்குமிடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், முதலீட்டிலிருந்து கிடைக்கும் இலாபம் ஈட்டம் ஆகும். இந்த இலாபம் கிடைப்பதற்கான காரணி வட்டி விகிதம் ஆகும்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications