சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள இந்திய அரசு அதிக அளவில் ஊக்குவித்து வந்தாலும், வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு அன்னிய முதலீடு என்பது சற்று தொய்வாகவே இருக்கும் என்று கிரிசில் நிறுவன அறிக்கைத் தெரிவித்திருக்கிறது.
சில்லறை வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களை, இந்தியாவில் உணவு மற்றும் மளிகைப் பொருள்களின் சில்லறை வணிகத்தைத் தவிர மற்ற அதாவது எலக்ட்ரானிக்ஸ் போன்ற சில்லறை வணிகத்தில் ஈடுபட தயக்கம் காட்டச் செய்வதாக கிரிசில் அறிக்கைத் தெரிவித்திருக்கிறது.
மேலும் உலகப் பொருளாதாரம் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் நிலையற்றத் தன்மையும், அன்னிய முதலீட்டாளர்களை இந்திய சில்லறை வணிகத்தில் ஈடுபட காலம் தாழ்த்துகிறது என்கிறது கிரிசில்!
கிரிசில் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இவைதான்!
சில்லறை வணிகம்
உலக அளவில் சில்லறை வணிகத்தில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள் தங்கள் சொந்த நாடுகளில் அதிகமான லாபத்தை ஈட்ட முடிவதில்லை. அதனால் அவர்கள் வருங்காலங்களில் வெளி நாடுகளில் உள்ள சில்லறை வணிகத்தில் அதிக அளவு முதலீடு செய்வதற்கு வாய்ப்பில்லையாம்!
ஒருவேளை சில்லறை வணிகத்தில் ஈடுபடும் ஒரு வெளிநாட்டவர் இந்திய சில்லறை வணிகத்தில் முதலீடு செய்யத் துணிந்துவிட்டால், அதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும். ஆனால் அதற்கு முன்பாக அவர் புதிய க்ரீன்ஃபீல்டு பேக் என்ட் மற்றும் ஃப்ரன்ட் என்ட் அடிப்படை கட்டமைப்புகளில், தனது வியாபார அளவிற்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும்.
மல்டி-ப்ரான்ட்
இந்திய சில்லறை வணிகத்தில் காலடி எடுத்து வைக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பேக்-என்ட் மற்றும் ஃப்ரன்ட் என்ட் ஆகியவற்றில், க்ரீன்ஃபீல்டு முதலீட்டைச் செய்ய வேண்டும்
அன்னிய முதலீட்டாளர்கள்
"இந்திய சில்லறை வணிகத்தில் ஈடுபட விரும்பும் அன்னிய முதலீட்டாளர்கள், இந்தியாவில் சரியான இடங்களைத் தேர்ந்தெடுத்து தங்களது விற்பனை மையங்களை அமைத்து விற்பனையைத் தொடங்க குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் ஆகுமாம்!
நாடாளுமன்ற தேர்தல்
இந்தியாவில் நிலவும் நிலையற்ற திரமற்ற அரசியல் சூழல், மற்றும் 2014ல் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் போன்ற காரணிகளும், இந்திய சில்லறை வணிகத்தில் ஈடுபட விரும்பும் அன்னிய முதலீட்டாளர்களை காலம் தாழ்த்தச் செய்யும் என்கிறது கிரிசில் அறிக்கை!
More From GoodReturns

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?

நிறைய MFs-ல முதலீடு செய்தால் லாபம் அதிகமா கிடைக்குமா? இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!



Click it and Unblock the Notifications