மும்பை: பண்டிகைக் காலத்தின் போது உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விநியோகம் மிகக் குறைவாக இருந்த நிலையில், இவ்விலையுயர்ந்த உலோகத்தின் உலகளாவிய விலைகளை ஒட்டி, அரசு இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கான மதிப்பு பத்து கிராமுக்கு 442 டாலர்கள் என்ற அளவில் சுங்க வாரியம் இந்த வாரம் உயர்த்தியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை சென்ட்ரல் போர்டு ஆஃப் எக்சைஸ் அண்ட் கஸ்டம்ஸ் (சிபிஇசி) வெளியிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது .
வெள்ளிக்கான சுங்க வரியின் மதிப்பில் மாற்றமில்லை,வெள்ளிக்கான இறக்குமதி சுங்க வரி மதிப்பு எவ்வித மாற்றமுமின்றி கிலோவுக்கு 699 டாலர் என்ற வீதத்திலேயே உள்ளது. அதே போல், இதர இறக்குமதி பொருட்களான பித்தளைத் துண்டுகள், கசகசா, பாக்கு மற்றும் சில சமையல் எண்னெய் வகைகள் போன்றவற்றிற்கான இறக்குமதி சுங்க வரிகளிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
உலகச் சந்தையில் நிலவி வரும் நிலையற்ற தங்க விலையை கருத்தில் கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மீதான சுங்கவரி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில், நண்பகல் 12 மணி அளவில் தங்க விலைகள் ஒரு அவுன்ஸ் 1345.40 டாலர் என்ற வீதத்தில் உயர்ந்த அதே வேளையில், வெள்ளி ஒரு அவுன்ஸ் 22.62 டாலர் என்ற அளவிலேயே உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் பொருட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தங்கத்திற்கு தட்டுப்பாடு நிலவியுள்ளது, இதனால் உள்ளூர் சந்தையில் தங்கம் மிக அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகிறது.
அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றின் படி, உலகளவில் தங்கத்தின் மிகப்பெரும் நுகர்வோராக விளங்கும் இந்தியா, ஏப்ரல்-செப்டம்பர் மாத காலகட்டத்தின் போது சுமார் 393.68 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிகிறது.
தங்க இறக்குமதிகளைக் குறைக்கும் பொருட்டு சுங்க வரியா உயர்த்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.