இந்தூர்: ரிலையன்ஸ் குழுமம் வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் மத்தியப் பிரதேசத்தில் சிமென்ட், மின்சாரம், நிலக்கரி, தொலைத்தொடர்பு ஆகிய வர்த்தகங்களில் சுமார் 60,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக அதன் தலைவர் அனில் அம்பானி தெரிவித்தார்.
அம்மாநில அரசு நடத்திய பெருமுதலீட்டாளர் கூட்டத்தில் பேசிய அவர் ரிலையன்ஸ் குழுமம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலக்கரி, மின்சாரம், சிமெண்ட் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற முக்கியத் துறைகளில் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
30,000 கோடி ரூபாய் முதலீடு
"மேற்கண்ட முக்கியத் துறைகளில் இந்த குழுமத்தின் மொத்த முதலீடு முப்பதினாயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டியுள்ளதுடன் இதன் மூலம் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய முதலீட்டாளராகவும் விளங்குகிறது" என அவர் தெரிவித்தார்.
மேக் இன் இந்தியா
பிரதமரின் "இந்தியாவில் உற்பத்தி" (make in India) திட்டத்தைக் குறிப்பிடுகையில், "நாங்கள் இந்தியாவில் மட்டுமல்ல "மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியை" செய்யவுள்ளோம் என்றார்.
முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு
"நாங்கள் இம்மாநிலத்தில் வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் 60,000 கோடி ரூபாயாக அதிகரிக்க உறுதி பூண்டுள்ளோம். எங்களுடன் இணைந்துள்ள மத்திய அரசினை முன்னணி தொழிற்துறை மாநிலமாக மாற்ற உறுதி ஏற்கிறோம்" என்றார், மேலும் அவர் இம்மாநிலத்தில் எங்களுடைய தற்போதைய வர்த்தக நடவடிக்கைகள் சுமார் 25000 பேருக்கு வேலை வாய்ப்புகளை தந்துள்ளது"
சமூக நல திட்டங்கள்
"மத்தியப் பிரதேச மக்களுக்காக எங்களிடம் கல்வி, உடல்நலம், கால்நடை நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த சமூக பொறுப்புகளை உள்ளடக்கிய திட்டங்களை வைத்துள்ளோம்".
சிவராஜ் சிங் சவுகான்
"சவுகான் மூன்றாவது முறை முதலமைச்சர் ஆகியுள்ள நிலையில் இந்தப் பிராந்தியத்தில் நீங்கள் செய்துள்ள இந்த சாதனைகளுக்கும் தொலைநோக்கு தலைமைக்கும் என்னுடைய தனிப்பட்ட வாழ்த்துக்கள்" என அவர் மேலும் தெரிவித்தார்.
More From GoodReturns

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications