பெங்களுரூ: நான்கு வருடத்திற்கு முன் உங்கள் பணத்தை எய்சர் மோட்டார்ஸ், மதர்சன் சுமி, ப்ளூ டார்ட், மைண்ட்ட்ரீ மற்றும் சுந்தரம் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தல் பலரும் சரித்திருப்பார்கள். ஏன்னெறால் இப்போது இந்திய சந்தையும், பொருளாதார நிலையும் மிகவும் தாழ்வான இடத்தில் இருந்தது.
இத்தருணத்தில் அனைவரும் தங்களின் முதலீட்டை காப்பதற்காக வங்கித்துறை நிறுவனங்களில் மட்டும் ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் உண்மையில் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால் உங்களின் முதலீடு தற்போது நான்கு மடங்கு உயர்ந்திருக்கும்.
எய்சர் மோட்டார்ஸ்
குறிப்பாக எய்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதலீடு 2010ஆம் தீபாவளி முதல் கடந்த தீபாவளி முதல் சுமார் 9 மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
BSE500 நிறுவனங்கள்
நாட்டின் முன்னணி பங்கு சந்தை முதலீட்டு ஆலோசனை நிறுவனமான மோத்திலால் ஆஸ்வால் செக்குரிட்டிஸ் நிறுவனம் BSE500 நிறுவனங்களின் பற்றிய ஒரு ஆய்வை நடத்தியது, இதில் 20 நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்தில் சுமார் 3 மடங்கு உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.
4 மடங்கு உயர்வு
மேலும் BSE500 பட்டியலில் இருக்கும் டாப் 20 நிறுவனங்களின் மொத்த சந்தை முதலீடு மட்டும் குறிப்பிட்ட காலகட்டத்தில் சுமார் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உதாரணம்
நவம்பர் 5, 2010ஆம் ஆண்டு ஒருவர் டாப் 20 நிறுவனங்களில் 1 இலட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால், 2014ஆம் ஆண்டில் நவம்பர் 5ஆம் தேதியில் 4 இலட்சமாக உயர்ந்திருக்கும். அதே வங்கியில் 10 சதவீத வட்டியில் 1 இலட்ச ரூபாய் முதலீட்டு நான்கு மடங்கு உயர 15 வருடம் ஆகும்.
ரிஸ்க் டூ ரஸ்க்
பங்கு சந்தை முதலீட்டில் ரிஸ்க் எடுத்தால் கண்டிப்பாக லாபம் அடையலாம் என்பது முழுமையான முட்டாள்தனம். சந்தையில் நிலையும், நிறுவனத்தின் வளர்ச்சி தன்மை ஆகியவற்றை உணர்ந்து, ஆய்வுகளுக்கு பின் தெளிவுடன் முதலீடு செய்தால் தான் லாபம் கிட்டும்.