டெல்லி: 2015ஆம் ஆண்டு இந்திய கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது என்றே சொல்லலாம். ஏன்..? காரணம் உண்டு.
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டியைத் தொடர்ந்து குறைத்ததன் மூலம், இந்தியாவில் கார்களின் விற்பனை எப்போதும் இல்லாத வகையில் 20 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விற்பனையில் உச்சம்...
2015ஆம் ஆண்டின் சிறிய வகைக் கார்கள் மட்டும் அல்லாமல் வேன், எஸ்யூவி, டிர்க் மற்றும் பஸ்களின் விற்பனை அதிகமாக இருந்தது. ஆனால் எப்போதும் விற்பனையில் உச்சம் பெறும் பைக் மற்றும் 3 சக்கர வாகனங்களின் விற்பனை 2015ஆம் ஆண்டில் குறைந்துள்ளது.
10 சதவீத வளர்ச்சி
2015ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் மட்டும் சுமார் 2,034,015 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவைப் பார்க்கும் போது 1,852,545 கார்களாக உள்ளது. ஆகையால் கடந்த ஒரு வருடத்தில் கார் விற்பனை சந்தை 9.8 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.
நிறுவனங்களும்.. வாடிக்கையாளர்களும்..
2015ஆம் ஆண்டில் இந்தியா ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளியிட்ட புதிய மாடல்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் மீது உதித்த புதிய நம்பிக்கையின் காரணமாகக் கார்களின் விற்பனை எப்போதும் இல்லாத வகையில் சுமார் 9.8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
வங்கிக் கடன்
பொதுவாக இந்தியாவில் கார் வாங்குவோர் வங்கிக் கடன் வாயிலாகவே வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 12 மாதங்களில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் சுமார் 1.25 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இதனால் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை..
அதுமட்டும் அல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் மக்கள் வழக்கத்தை விடவும் அதிகமான அளவில் கார்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications