பொதுத்துறையை சேர்ந்த மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐயின் துணை நிறுவனமான, எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம் மார்ச் 2-ம் தேதி தனது பங்குகளை வெளியிட உள்ளது.
எஸ்பிஐ கார்ட்ஸ் இந்த பொதுப்பங்கு வெளியீடு மூலமாக 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை திரட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஐபிஓ-வில் எஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகளை மார்ச் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை வாங்கலாம் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.
மேலும் இந்த பங்குகள் விலை குறைந்தபட்சம் 750 ரூபாய் எனவும், அதிகபட்சமாக 755 ரூபாய் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐபிஓ-வில் குறைந்தபட்சம் 19 பங்குகள் ஒரு லாட் என வாங்க முடியும்.
நாளை ஐபிஓ தாக்கல்
எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தில் எஸ்பிஐ வங்கிக்கு 76% பங்கும், கார்லைல் குழுமத்திடம் 36% பங்குகளும் உள்ளன. எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கோடி பங்குகளைப் மார்ச் 2-ம் தேதி வெளியிட உள்ளது. இதனை நாம் மார்ச் 5-ம் தேதி வரை பங்குகளை ஐபிஓ மூலமாக வாங்கலாம். இதில் எஸ்பிஐ மற்றும் கார்லைல் குழுமம் முறையே 3.73 கோடி மற்றும் 9.32 கோடி பங்குகளையும் பங்கு சந்தையில் ஏற்றலாம் என்றும் கூறப்படுகிறது.
இவ்வளவு லாபமா?
சென்ற நிதியாண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 36% அதிகரித்துள்ளது. இதே லாபம் 78% அதிகரித்து 1,034.58 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வலுவான தேவை உள்ளது
எஸ்பிஐ வங்கியின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்ட்ஸ், இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமாக உள்ளது. சொல்லப்போனால் இந்திய கிரெடிட் கார்டு சந்தையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம் சுமார் 18% பங்கு வகித்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் முதலீட்டாளர்கள் எஸ்பிஐ கார்டுகளுக்கு வலுவான தேவை இருப்பதால், தொடக்கத்த நாளிலேயே புரட்டி எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்
சொல்லப்போனால் இது ஒரு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது. அதிலும் தொடக்க நிலையிலேயே முதலீடு செய்யப்படுவதால், இது எதிர்காலத்தில் கணிசமான அளவு லாபத்தை கொடுக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்பிஐ கார்ட்ஸ் ஐபிஓவில் குறைந்தபட்சம் 19 பங்குகள் ஒரு லாட் என வாங்க முடியும்.
ஊழியர்களுக்கு என்ன சலுகை
இந்த எஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் மார்ச் 16-ம் தேதி பங்கு சந்தையில் பட்டியிலிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த பொதுப்பங்கு வெளியீட்டில் எஸ்பிஐ ஊழியர்களுக்கு 75 ரூபாய் சலுகை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு 18.4 லட்சம் பங்குகளை முன்பதிவு செய்கிறது. எனினும் இதற்கு தகுதியான ஊழியர்களின் முதலீடு 5 லட்சத்தை தாண்டக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!



Click it and Unblock the Notifications