இந்தியாவின் மிகபெரிய அளவிலான பொதுப் பங்கு வெளியீடாக இருக்கும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ, நாளை தொடங்கவுள்ளது.
இதற்கிடையில் முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட அதன் பங்கு வெளியீட்டின் மதிப்பினை விட குறைக்கப்பட்டிருந்தாலும், தற்போது வரையில் மிகபெரிய பங்கு வெளியீடாகவே உள்ளது. இதற்கிடையில் சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் இது முக்கிய வெளியீடாக பார்க்கப்படுகிறது.
இதனால் மிகப்பெரிய அளவில் விண்ணப்பங்கள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது தொடக்கம்
குறிப்பாக பாலிசிதாரர்கள், ஊழியர்கள், சில்லறை முதலீட்டாளர்கள் மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மே 4 அன்று தொடங்கவுள்ள எல்ஐசி ஐபிஓ-ஆனது, மே 9 அன்று முடிவடையவுள்ளது. இதன் ஐபிஓ மதிப்பு 21,000 கோடி ரூபாயாகும். இது முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட அதன் பங்கு வெளியீட்டின் மதிப்பினை விட குறைக்கப்பட்டிருந்தாலும், தற்போது வரையில் நாட்டில் மிகப்பெரிய பங்கு வெளியீடாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியீட்டு விலை
இந்த பங்கு வெளியீட்டில் விலை பங்குக்கு 902 - 949 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பாலிசி ஹோல்டர்களுக்கு ஒரு பங்குக்கு 60 ரூபாய் தள்ளுபடி கிடைக்கலாம் என்ற நிலையில், பங்கு விலை நிர்ணயத்தில் அதிகபட்ச விலையில் இருந்து ஒப்பிட்டு பார்க்கும்போது பாலிசி ஹோல்டர்களுக்கு ஒரு பங்குக்கு 889 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். பாலிசி ஹோல்டர்கள் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் முதலீட்டினை செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிசிஹோல்டர்கள் பான் இணைப்பு
எல்ஐசி பாலிசி ஹோல்டர்கள் தங்களது பாலிசியுடன் கட்டாயம், பான் நம்பரை பிப்ரவரி 28, 2022க்குள் இணைத்திருக்க வேண்டும். அப்படி பான் நம்பருடன் இணைக்காத பாலிசி ஹோல்டர்களுக்கு, 60 ரூபாய் தள்ளுபடி கிடைக்காது. எனினும் சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் 45 ரூபாய் சலுகையினை பெற்றுக் கொள்ளலாம். ஒரு லாட்டுக்கு 15 பங்குகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் சலுகை
எல்ஐசி பாலிசிகள் முதிர்வு, சரண்டர் செய்தல் உள்ளிட்ட சில காரணிகளுக்கு மத்தியில், பாலிசியில் இருந்து வெளியேறாவிட்டாலும், அவர்களும் ஒதுக்கீட்டில் தகுதி உடையவர்கள் தான் என பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் எல்ஐசி தெரிவித்துள்ளது. ஆக ஒரு உங்களது பாலிசி காலாவதி ஆகியிருந்தாலும் ஐபிஓ -வுக்கு விண்ணப்பிக்கலாம்.
எந்த பாலிசிகள் எல்லாம் பொருந்தும்
பாலிசிஹோல்டர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தாலும், என்ஆர்ஐ(NRI)-களுக்கு இந்த சலுகை கிடையாது. இந்தியாவில் இருக்கும் பாலிசி ஹோல்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழும பாலிசிகளை தவிர மற்ற அனைத்து பாலிசிகளும், இந்த ஐபிஓ சலுகையினை பெற தகுதியானவை தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்யலாமா?
பாலிசிதாரர்கள் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில்லறை ,முதலீட்டாளர்கள் பிரிவில் பாலிசிதாரர்கள் அதிகம் வேண்டுமெனில் முதலீடு செய்து கொள்ளலாம். அங்கும் 45 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். ஆக இதன் மூலம் 4 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications